முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில், அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று நடைபெற்றிருந்தது.
இந்த பேரணி காரணமாக கொழும்பு நகர் இன்று ஸ்தம்பிதம் அடைந்திருந்தது. பல ஆயிரம் பேர் இந்த பேரணியில் கலந்துகொண்டு மகிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
“மக்கள் பலம் கொழும்புக்கு” என்ற தொனிப்பொருளில் கூட்டு எதிர்க்கட்சியினால் இந்த ஆர்ப்பாட்ட பேரணி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த பேரணி நிறைவு பெற்றுள்ள நிலையில், பேரணியில் பின்னர் கொழும்பு நகரின் தற்போதைய நிலை குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இந்த புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. வீதிகளில் முழுவதும் குப்பைகள் வீசப்பட்டுள்ளதையும், மக்கள் வீதியில் உறங்குதையும் இந்த புகைப்படங்கள் காட்டுகின்றன.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.