கொழும்பு வாழ் மக்களுக்கு அரசாங்கத்தின் அவசர அறிவிப்பு!

0

கொழும்பு வாழ் மக்களுக்கு அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை இன்றையதினம் விடுத்துள்ளது.

எந்தவித அச்சமோ, பயமோ இல்லாமல் அலுவலகம் மற்றும் பாடசாலைகளுக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரம் முழுமையான பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அச்சமின்றி நாளாந்த கடமைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இன்றைய தினமும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்பு நகரத்தின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு நேற்றும் இன்றும் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சில சமயங்களில் இன்றையதினமும் தொடரக் கூடிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக மக்களின் பாதுகாப்பு கருதி விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சமகால அரசாங்கத்திற்கு எதிராக நேற்று முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்ட பேரணி தோல்வியில் முடிந்துள்ளதாக அரச தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொழும்பு நகரின் தற்போதைய நிலை! வைரலாகும் புகைப்படங்கள்!
Next articleவிஸ்வரூபம் எடுக்கும் படையணி! கொழும்பின் நள்ளிரவு காவலனாக மாறிய மஹிந்த!