Today Rasi Palan இன்றைய பஞ்சாங்கம் 15-12-2019 இன்றைய ராசி பலன் !

0

இன்றைய பஞ்சாங்கம் 15-12-2019
கார்த்திகை 29
ஞாயிற்றுக்கிழமை
திரிதியை திதி காலை 07.18 வரை பின்பு சதுர்த்தி திதி பின் இரவு 05.34 வரை பின்பு தேய்பிறை பஞ்சமி.
பூசம் நட்சத்திரம் பின்இரவு 04.00 வரை பின்பு ஆயில்யம்.
நாள் முழுவதும் சித்தயோகம்.
நேத்திரம் – 2. ஜீவன் – 1.
சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.
சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00
எம கண்டம் – பகல் 12.00 – 01.30
குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30
சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00
மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00

இன்றைய நாளுக்கான‌ ராசி பலன் – 15.12.2019

மேஷம்: விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். இன்று கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.

ரிஷபம்: புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள்.

மிதுனம்: பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைக்கூடும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும்.

கடகம்: குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். இன்று உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பிள்ளைகளின் விருப்பம் நிறைவேறும்.

சிம்மம்: தெய்வ வழிபாடு நல்லது. வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். இன்று பிள்ளைகளால் மன அமைதி குறையும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் நல்ல லாபம் கிட்டும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம்.

கன்னி: வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். இன்று எந்த செயலையும் துணிவோடு செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

துலாம்: வியாபாரத்தில் வருமானம் பெருகும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இன்று மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

விருச்சிகம்: கடன்கள் குறையும். இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமாராக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மன நிம்மதியை தரும்.

தனுசு: எதிலும் கவனம் தேவை. இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். அலுவலகத்தில் பணிபுரிவோர் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடை பிடிக்க வேண்டும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது.

மகரம்: தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடல்நிலை சீராக இருக்கும். வேலையில் பணிச்சுமை குறையும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.

கும்பம்: கடன் பிரச்சினைகள் குறையும். இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும்.

மீனம்: அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களுக்கு உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் வரலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சிக்கல்கள் குறையும். எந்த செயலையும் சற்று சிந்தித்து செய்வது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleToday Rasi Palan இன்றைய பஞ்சாங்கம் 14-12-2019 இன்றைய நாளுக்கான‌ ராசி பலன் !
Next articleஇந்த‌ வார ராசி பலன் – டிசம்பர் 15 முதல் 21 வரை !