பிரித்தானியாவில் பிரெக்ஸிற் தொடர்பில் குழப்பமான சூழல் தொடரும் நிலையில் நாட்டின் பெரும் செல்வந்தர்களில் ஒருவர் வெளியேற இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பில்லியனரின் அதிரடி முடிவால் பிரித்தானிய பொருளாதாரத்தில் கடுமையான தாக்கம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் காலக்கெடு நெருங்கி வருகிறது.
இதுவரை உறுதியான ஒரு முடிவை எடுக்க தெரேசா மே தலைமையிலான அரசாங்கத்தால் முடியவில்லை என்பது மட்டுமல்ல திணறியும் வருகிறது.
இந்த நிலையில் பிரித்தானிய பொருளாதாரத்திற்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் பில்லியனர்களில் முக்கியமானவரான Sir Jim Ratcliffe நாட்டைவிட்டு வெளியேற இருப்பதாக அறிவித்துள்ளார்.
65 வயதான Sir Jim Ratcliffe-ன் மொத்த சொத்து மதிப்பு 21 பில்லியன் பவுண்டுகள்.
Ineos என்ற ரசாயன நிறுவனத்தின் தலைவரான Jim Ratcliffe கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 2.2 பில்லியன் பவுண்டுகள் வருவாய் ஈட்டியுள்ளார்.
மட்டுமின்றி இவரது நிறுவனத்தில் சுமார் 18,500 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். Ineos என்ற ரசாயன நிறுவனத்தில் சுமார் 60 சதவிகித பங்குகளை தம் வசம் வைத்திருக்கும் Jim Ratcliffe தற்போது பிரஞ்சு பிரதேசத்தின் கீழ் உள்ள மொனாக்கோவில் குடியேற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு சுமார் 440 மில்லியன் பவுண்டுகள் வரி இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.