Home Patti Vaithiyam நடக்க முடியாத அளவுக்கு, தாங்க முடியாத குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம்!

நடக்க முடியாத அளவுக்கு, தாங்க முடியாத குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம்!

0
5315

வயது அதிகரிக்கும் போது, உடலில் பிரச்சனைகளும் அதிகரிக்கும். எப்போது எப்பிரச்சனை ஆரம்பமாகும் என்றே தெரியாது. அப்படி ஆரம்பமாகும் பிரச்சனைகளில் ஒன்று தான் குதிகால் வலி. இந்த வலியில் இருந்து விடுபட, பலரும் பல முயற்சிகளை மேற்கொண்டிருப்பார்கள். இருப்பினும், எந்த பலனும் கிடைக்காமல் இருக்கும்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஓர் இயற்கை பானத்தின் மூலம், குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும். வயது அதிகரிக்கும் குதிகால் வலி வருவதற்கு, பாதங்கள் விரிவடைவது தான் காரணம். இப்படி விரிவடைவதால், குதிகால் எலும்புகளில் அழுத்தம் அதிகரித்து வலியை உண்டாக்குகின்றன.

சரி, இப்போது குதிகால் வலியில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும் அற்புத பானம் குறித்து காண்போம்.

முதலில் சிறிய அளவிலான இஞ்சியை எடுத்து தோலுரித்து, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு பாத்திரத்தில் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
பின்பு துண்டுகளாக்கி வைக்கப்பட்டுள்ள இஞ்சியை கொதிக்கும் நீரில் போட்டு, 5-7 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

பிறகு அதில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இறுதியில் அதை வடிகட்டி தினமும் 3-4 முறை குடிக்க வேண்டும்.

குறிப்பு
இஞ்சி டீயைக் குடித்து வருவதுடன், தினமும் 2 முறை இஞ்சி எண்ணெயைக் கொண்டு குதிகாலை மசாஜ் செய்து வந்தால், விரைவில் குதிகால் வலியில் இருந்து விடுபடலாம்.

Previous articleஉடலில் உள்ள அசுத்த இரத்தம் நீங்கி உடல் வலுப்பெற செய்யும் வசிய மூலிகை பற்றி தெரியுமா? உங்களுக்காக ஒரு அரிய சித்த வைத்தியம்.!
Next articleஎதையும் சாப்பிட முடியாமல் வயிறு எரிகிறதா? வயிற்றுப் புண்ணை குணமாக்கும் மூலிகை மோர்!!