இடுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும். நரம்பை சுண்டி இழுப்பதை போல வலி ஏற்படும். இழுப்பு, வலி பயத்தை உண்டாக்கும். பயம் வேண்டாம் – இதற்கு நிவாரணங்கள் உள்ளன. முதுகெலும்பு பிரச்சனையால் இந்த “இழுப்பு” ஏற்படுகிறது.
பொடுதலை இலை கைப்பிடியளவு எடுத்து வெள்ளைப் பூண்டு ஏழு, மிளகு 15, சுக்கு ஒரு பாக்குஅளவு சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிடவேண்டும். இவ்விதமாக 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு பிடிப்பு குறையும்.உளுந்தம் பருப்பு உணவு வகைகளை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு பகுதி நரம்புகள் பலப்படும்.




