தினமும் சித்தர் துதியினை ஒரு நாளைக்கு இருமுறை என்று 1 வருடம் வரை வீட்டு பூஜை அறையில் ஜபித்து வந்தால், வீட்டில் உள்ள பணக்கஷ்டங்கள் குறையும்.
சித்தர் துதி
ஓம் அகத்தீசாய நமக
ஓம் நந்தீசாய நமக
ஓம் திருமூல தேவாய நமக
ஓம் கருவூர் தேவாய நமக
ஓம் ராமலிங்க தேவாய நமக
பணக்கஷ்டம் குறைவதற்கு எளிய பரிகாரங்கள்
காலை வேளையில் குளித்து முடித்தவுடன் சிறிது சர்க்கரை எடுத்து வீட்டு வாசல் வெளியே தூவி வர வேண்டும். ஏனெனில் அந்த சர்க்கரையை சிறு பூச்சிகள் மற்றும் எறும்புகள் சாப்பிட்டு வரும் போது, நம்து கஷ்டங்கள் சிறிது சிறிதாக குறையுமாம்.
காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்ஷி அம்மனை, வளர்பிறை அன்று சித்திரை நட்சத்திரத்தில் பட்டு புடவை சாற்றி வழிபட்டு வந்தால், கடன் சுமையில் இருந்து மன நிறைவான வாழ்க்கை கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.
வியாழக்கிழமை அன்று கொஞ்சம் குங்குமம் வாங்கி அதை வெள்ளிக் கிழமைகளில் அம்பாள் அல்லது தாயார் சன்னதியில் தொடர்ந்து 11 வாரங்கள் கொடுத்து வர வேண்டும்.
கோதுமையை அரைக்க கொடுக்கும் போது, அதில் 7 துளசி இலைகள் மற்றும் சிறிது குங்குமப்பூ சேர்த்து அரைக்க கொடுத்து வாங்க வேண்டும். அந்த மாவு வீட்டில் உள்ளவரை பண பிரச்சனைகள் இருக்காதாம்.
தொடர்ந்து 5 வெள்ளிக் கிழமைகள் மஹாலக்ஷ்மி சன்னதியில் மல்லிகை பூ மாலை சாற்றி வழிபட்டு வந்தால், கடன் மற்றும் பணக்கஷ்டப் பிரச்சனைகள் ஏற்படாதாம்.