உடல் கொழுப்பையும் நச்சுக்களை நீக்கும் மின்னல்வேக வழி!

0

நம் உடலில் நச்சுக்கள் சேராமல் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு சேர்ந்தால் அவற்றை எவ்வளவு சீக்கிரம் நீக்குகிறீர்களோ அவ்வளவு சீக்கிரம் நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திரும்ப முடியும். நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறீர்களா ? அப்படியானால் நீங்கள் உங்கள் உடல் நிலையை ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

உடலில் உள்ள நச்சுக்கள் உங்கள் சக்தியைக் குறைத்து உங்களை நாள் முழுவதும் சோர்வாக உணரவைக்கும். இங்கு நாம் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவது மட்டுமல்ல உடலில் உள்ள அதிகமான கொழுப்பையும் நீக்கும் ஒரு அற்புதமான மருந்துக்கு கலவையைப் பற்றி பார்க்கப் போகிறோம்.

செய்முறை
1: மிளகு, துருவிய இஞ்சி, தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்துகொள்ளவும்.

இந்த கலவை அடியில் நன்கு தேங்கியவுடன் தெளிவான நீரை வேறொரு டம்ளரில் ஊற்றிக் கொள்ளுங்கள். செலெரி இலைகளை இந்த பானத்தின் மீது போடவும்.

இதை குடிக்கையில் செலெரி இலைகளை சாப்பிட்டுக் கொண்டே குடிக்கவும். இதை தினமும் காலையிலும், மாலையிலும் இரவிலும் பருகிவர நல்ல பலன்கள் தெரியும். அடியில் தேங்கியுள்ள பொருட்களை பிரிட்ஜில் வைத்து பின்னர் பயன்படுத்தலாம்.

இதைத் தவிர தொடர்ந்து பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை இதோ :
1. நீங்கள் வழக்கமாக பருகும் அளவை விட அதிக அளவு தண்ணீரைப் பருகி நச்சுக்களை நீக்குங்கள்

2. சற்று ஓய்வாக இருக்கையில் நன்கு மூச்சுப் பயிற்சி மேற்கொண்டு நுரையீரலில் உள்ள நச்சுக்களை நீக்குங்கள்

3. இயற்கையான சருமப் பராமரிப்புப் பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நச்சுப் பொருட்களை தவிருங்கள்.

இதைத் தவிர தொடர்ந்து பின்பற்ற வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. அவை இதோ :
4. உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் நச்சுக்களை நீக்கவும் ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்

5. நாக்கை தினமும் டங் கிளீனர் கொண்டு சுத்தம் செய்யுங்கள்.

Previous articleஉடலுக்கு ஆரோக்கியம் தர சேண்ட்விச்சை இப்படித்தான் நீங்கள் சாப்பிட வேண்டும்!
Next articleஇனிமையான குரல் கிடைக்க நீங்கள் என்ன செய்யலாம்!