பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமபா நிகழ்ச்சியில் கானா பாடல் பாடி அனைவரையும் சரவெடி சரண் மகிழ வைப்பார்.
இன்று ஒளிபரப்பான நிகழச்சியில் அவரை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பரிசு ஒன்று கிடைத்துள்ளது.
சரவெடி சரணின் திறமையை பார்த்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அது மாத்திரம் இன்றி, மேடையிலேயே யுவன் ஷங்கர் ராஜா அவருடைய இசையில் பாடுவதற்காக வாய்ப்பினையும் வழங்கியுள்ளார். இது குறித்த காணொளிகள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.
இதேவேளை, யுவன் இசையில் பாடுவது என்பது இன்றைய பல இளைஞர்களின் கனவுகளில் ஒன்று. அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் இந்த இளைஞருக்கு கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், குறித்த இளைஞர் யுவனை மகிழ வைக்க பாடல் ஒன்றையும் மேடையில் இயற்றி பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.