இந்திய சமையல் செய்முறையில் சமையல் செய்யும் போது உணவின் முக்கிய பொருளாக வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்கப்படுவது வழக்கம்.
இந்த பூண்டு மற்றும் வெங்காயத்தில் இருக்கும் மருத்துவ குணங்களின் மூலமாக நமது உடல்நலமானது பாதுகாக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அந்த வகையில், வெங்காயம் மற்றும் பூண்டின் உதவியால் புற்றுநோயை குணப்படுத்த இயலும் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மேலும், தற்போதுள்ள உணவு பழக்கவழக்க முறையின் காரணமாக பலருக்கு பெருங்குடல் புற்றுநோய்யானது ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களின் தாக்கத்தின் மூலமாக குடல் புற்றுநோய், மலவாய் புற்றுநோய் என்று பெண்களுக்கும் ஆண்களுக்கும் ஏற்பட்டு, இதனால் உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை குறைப்பதற்கு வெங்காயம் சேர்ந்து வந்தாலே போதுமானது என்று ஆய்வில் வெளிவந்துள்ளது.
இந்த விஷயம் குறித்த ஆராய்ச்சியானது சுமார் 833 நோய்வாய்ப்பட்ட மக்களிடமும், 833 ஆரோக்கிய வாழ்க்கையை வைத்துள்ள மக்களிடமும் மேற்கொண்ட ஆய்வில், அவர்களின் உணவு பழக்க வழக்கம் குறித்து ஆராய்ந்து, வெங்காயம் மற்றும் பூண்டை சாப்பிடக்கூறி மேற்கொண்ட ஆராய்ச்சியில் பெருங்குடல் புற்றுநோயை கட்டுப்படுத்த முடியும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், இதன் மூலமாக நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் மற்றும் உணவுக்குழல் புற்றுநோய் ஆகியவற்றையும் குணப்படுத்த பயன்படுகிறது.