Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal பெற்றோரின் வர்ப்புதலுக்காக! மாப்பிள்ளையே இல்லாமல் திருமணம் செய்து கொண்ட பெண்? நடந்தது என்ன?

பெற்றோரின் வர்ப்புதலுக்காக! மாப்பிள்ளையே இல்லாமல் திருமணம் செய்து கொண்ட பெண்? நடந்தது என்ன?

0
759

லுலு ஜெமிமா 32 வயதான பெண் தன்னை தானே திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லுலு ஜெமிமா 32 வயதான இவரை நீண்ட நாளாக திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்தனர். இறுதியாக, பெற்றோரின் கோரிக்கைய ஏற்ற லுலு திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டார்.

உகாண்டா நாட்டைச் சேர்ந்த லுலு ஆக்ஸ்ஃபோர்டு பல்கழைக்கழகத்தின் மாணவி ஆகஸ்ட் 27ம் தேதி தன்னை தானே திருமணம் செய்து கொண்டார்.

இது குறித்து டெய்லி மெயில் கூறுகையில், உகாண்டாவில் நடைபெற்ற லுலுவின் திருமணத்திற்கு அவரின் பெற்றோர் வரவில்லை. மறுநாள் நாங்கள் லுலுவிடம் பேசிய போது, சற்று குழப்பத்துடனும், மனமுடைந்தும் காணப்பட்டார். தந்தை தன்னிடம் இதுபற்றி எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார்.

கோ ஃபண்ட் மீ என்ற பக்கத்தை தனது படிப்பிற்கான கட்டணத்தை சேமிக்க வைத்துள்ளார். அதில் தனது திருமண குறித்த முடிவை பதிவிட்டுள்ளார். எனது தந்தை எனக்கு 16 வயது ஆனபோதே என்னுடைய திருமணத்தில் பேச வேண்டிய உரைய தயார் செய்து விட்டார். சமீபகாலமாக என்னுடைய ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் எனக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் என்று வேண்டுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால் என்னை நன்றாக பார்த்துக்கொள்ள கூடியவரை 32 வது திருமணம் செய்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமண செலவு
லுலுவின் திருமணத்திற்கான மொத்த செலவு $2.62 மட்டுமே. அதுவும் அவர் பயணத்திற்கு ஆன செலவே. திருமண உடையை பிறந்த நாள் பரிசாக லுலுவிற்கு அவரது தோழி கொடுத்துள்ளார். லுலுவின் சகோதரர் திருமண கேக்கை தயார் செய்து கொடுத்துள்ளார். மேலும் திருமணத்திற்கு வந்த விருந்தினர்கள் தங்களது பில்லை தாங்களே கொடுத்து விட்டன

Previous articleமட்டக்களப்பில்! இளம் தமிழ் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
Next articleஇது என்ன கூத்து! பிரிந்த காதலனுடன் இணைந்த த்ரிஷா!