வேறு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு இருப்பதை அறிந்த மனைவி அவரை வீட்டை விட்டு வெளியேற்றிய சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்தவர் ஜேம்ஸ் ரோசேண்டேல் (34). இவருக்கு ஜொடி (35) என்ற மனைவி உள்ளார்.
ஜேம்ஸ், ராணுவத்தில் குதிரைப்படையில் பணிபுரிந்த நிலையில் உடன் பணிபுரியும் கோலிட் (34) என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நட்பையும் தாண்டி ஜேம்ஸுக்கும், கோலிடுக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது.
முக்கியமாக கனடாவுக்கு இருவரும் வேலை பயிற்சி விடயமாக சென்ற போது இருவரும் அதிகமாக நெருக்கமானதை அறிந்த ஜேம்ஸின் மனைவி ஜொடி கணவருடன் சண்டை போட்டுள்ளார்.
அத்துடன் ஜேம்ஸை வீட்டை விட்டு வெளியேற சொன்னதோடு, ராணுவ குடியிருப்பில் தங்கி கொள்ள வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஜேம்ஸ், கோலிட்டின் தொடர்பு ராணுவ உயர் அதிகாரிகளுக்கு தெரிந்த நிலையில் இது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.