41 வயது நபர் அதிர்ச்சி பேட்டி! இதற்காக தான் 11 வயது சிறுமியை மணந்தேன்!

0

சிறுமிக்கு ஏழு வயதாக இருக்கும் போதே அவரை திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும், இதற்கு காரணம் இச்சை மோகம் கிடையாது எனவும் 11 வயது சிறுமியை மணந்துள்ள 41 வயதான நபர் கூறியுள்ளார்.

மலேசியாவை சேர்ந்த கரீம் (41) என்பவர் சில வாரங்களுக்கு முன்னால் 11 வயதான சிறுமியை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், நீதிமன்றம் கரீமுக்கு கடுமையான அபராதம் விதித்தது.

இந்நிலையில் சிறுமியை மணந்த காரணத்தை கரீம் முதல்முறையாக வெளியிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், சிறுமி மேல் உள்ள இச்சை மோகத்தால் அவரை நான் மணக்கவில்லை.

அவர் என் வீட்டருகில் தான் சிறு வயதிலிருந்தே வசித்து வந்தார். சிறுமிக்கு ஏழு வயதாக இருக்கும் போதே அவரை மணக்க ஆசைப்பட்டேன்.

என் மூன்று மனைவிகளுடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் என் ஆசை.

ஆனால் நான் மணந்த இரண்டு மனைவிகளின் உணர்வுகளுக்கும் மதிப்பளிப்பதால் தற்போது அதை செய்ய இயலாது.

என்னை தவறாக பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை என கூறியுள்ளார்.

இதெல்லாம் ஒரு கருத்து என்று பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇரவோடு இரவாக கொழும்பிலிருந்து வவுனியா சென்ற 50 அம்பியூலன்ஸ் வண்டிகள்!
Next articleஅவர் யார்? ஸ்ரீரெட்டியிடம் நற்சான்றிதழ் வாங்கிய பிரபல நடிகர்! அப்படி என்ன செய்தார்னு தெரியுமா?