3 லட்சம் ரூபாய்க்கு அழைக்கிறார்கள்! தொல்லை தருவதாக பிரபல தமிழ் சீரியல் நடிகை வேதனை!

0

பிரபல சீரியல் நடிகையான ஜெயலட்சுமி தனக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி தொல்லை தருவதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதால் அது தொடர்பாக இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பிரிவோம் சந்திப்போம், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெயலட்சுமி. இதைத் தொடர்ந்து தற்போது சீரியல்களிலும் ஜெயலட்சுமி நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்பு ஜெயலட்சுமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தனது வாட்ஸ் ஆப் எண்னுக்கு அறிமுகம் இல்லா சில நபர்கள் ஆபாச தகவல்களை அனுப்புவதாகவும், அதில் ஒரு தகவலில், அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்களுடன் டேட்டிங் சென்றால் 30 ஆயிரம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும் என்று அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்திருந்தார்

அவரது புகார் குறித்து விசாரித்த விபசார தடுப்பு பிரிவு காவல்துறையினர் இந்த தகவலை அனுப்பிய விருகம்பாக்கத்தை சேர்ந்த துணை நடிகை ஏஜெண்டுகளான முருக பெருமாள் , கவியரசு ஆகிய இருவரை கைது செய்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபள்ளி மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய பெண் ஆசிரியை: கைது செய்த பொலிசார்!
Next articleஇது தமிழ் திரையுலகிற்கான நேரம்! பிரபல நடிகரின் லீலைகளை வெளியிட்ட லீக்ஸ் புகழ் நடிகை!