வலியே இல்லாமல் 15 நிமிடத்தில் பிரசவம்! அது எப்படி சாத்தியம்..!

0

சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாக யாரேனும் சொன்னால் அவர்களை விசித்திரமாகப் பார்க்கிற காலம் இது. தேவையோ, இல்லையோ, பெரும்பாலான பிரசவங்கள் சிசேரியனாகத்தான் இருக்கின்றன.

மருத்துவர்கள் மக்களையும் மக்கள் மருத்துவர்களையும் மாறி மாறி காரணம் காட்டுகிறார்கள்.

ஆசைக்கொன்று, ஆஸ்திக்கொன்று என்று சொல்வதுண்டு. ஒரு பெண்ணின் வாழ்வின் முக்கிய கட்டம், குழந்தை பெற்றுக் கொள்ளும் தருணம்.

பத்து மாதங்கள் தன் வயிற்றுக்குள்ளேயே பொத்தி வைத்து பாதுகாத்த குழந்தையை வெளியேற்றும் அந்த நிமிடங்களை அவளால் என்றுமே மறக்க முடியாது.

குழந்தை பிரசவிக்கும் பெண்களின் அடிவயிற்றினில் முடக்கறுத்தான் இலை கொண்டு பற்று போட்டால் பிரசவ வலி இல்லாமல் பதினைந்து நிமிடத்தில் சுகமாக குழந்தை பிறக்குமாம்.

மாற்றடுக்கில் அமைந்த பல்லுள்ள இலைகளையும்,கோணங்களில் இறகுள்ள காய்களையும் உடைய ஏறு கொடி, மழைக் காலத்தில் எல்லா இடங்களிலும் வளரும்.

இதன் இலை, வேர் மருத்துவ குணமுடையது. இதன் இலையை அவித்துச் சாறு எடுத்து ரசமாக்கி சூப் போல உணவோடு வாரம் ஒரு உட்கொள்ள மலச்சிக்கல் தீரும்.

இந்த இலையை அரிசி மாவுடன் கலந்து அடை செய்து சாப்பிட உடம்பு வலி காணாமல் போகும்.

வேரை ஒரு பிடி நல்ல நீரில் காய்ச்சி ஒரு குவளையை அப்படியே கால் குவளையாக வரும் வரை காய்ச்சி, காலையிலும்,மாலையிலும் 21 நாட்கள் சாப்பிட்டு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் 21 நாட்கள் சாப்பிட மூலம் தீரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரித்தானிய அரச குடும்பத்திற்கு புது வரவு: ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார் இளவரசி கேட்!
Next articleகுழந்தை பிறந்த பிறகு குண்டாகி விட்டீர்களா? ஒல்லியாக இதை மட்டும் பண்ணுங்க போதும்..!