நேபாளத்தை சேர்ந்த 14 வயது சிறுமி குழந்தை பெற்றுள்ள நிலையில் அந்த குழந்தையின் தந்தை 13 வயது சிறுவன் தான் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தை சேர்ந்த சிறுவன் ரமேஷ் தமங் (13). இவன் பள்ளிக்கூடத்தில் படித்து வந்த நிலையில் அதே பள்ளியில் பபித்ரா (14) என்ற சிறுமி படித்து வந்தார்.
கடந்த ஓராண்டு இரண்டு மாதம் முன்னர் தமங்கும், பபித்ராவும் காதலித்து வந்த நிலையில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து சமீபத்தில் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் இருவரிடமும் விசாரித்தனர், நேபாளத்தில் ஆண் மற்றும் பெண்ணின் திருமண வயது 20 என்பதால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடியாது என்று பொலிசார் மறுத்துவிட்டனர்.
இதனிடையில் திருமண வயதை அடைந்ததும் பபித்ராவை, ரமேஷ் திருமணம் செய்து கொள்வான் என அவர்களின் ஊர்மக்களும் கூறியுள்ளனர்..