12 ராசியினருக்கும் நவராத்திரி 2021 காலப்பகுதி எப்படி இருக்கப்போகிறது! பணவரவு அதிகமாக கிடைக்கும் ராசிக்காரர் யார்!

0

12 ராசியினருக்கும் நவராத்திரி 2021 காலப்பகுதி எப்படி இருக்கப்போகிறது! பணவரவு அதிகமாக கிடைக்கும் ராசிக்காரர் யார்!

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று நவராத்திரி. இந்தாண்டு நவராத்திரி பண்டிகை இன்று அக்டோபர் 7ம் தேதி தொடங்கி 14ம் தேதி முடிவடைகிறது.

நவராத்திரியின் போது தேவியின் 9 வடிவங்கள் வழிபடுவது வழக்கம்.

தேவியின் எல்லையற்ற அருளைப் பெற, ஒவ்வொரு நாளும் அன்னையை சிறப்பு அலங்காரமும், பிரசாதங்களைப் படைத்து வழிபடுவது நல்லது.அதே போல் 12 ராசியினர் சிறப்பான பலனைப் பெற எப்படி வழிபட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

​மேஷம்

நவராத்திரியின் போது மேஷ ராசிக்காரர்கள் மீது அன்னையின் அருள் நிலைத்திருக்கவும், உங்கள் மனதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நீங்கள் யோகா, தியானம் மேற்கொள்வது அவசியம். நீங்கள் செய்யக்கூடிய வேலையில் நல்ல வெற்றி பெற பொறுமையைக் கையாளவும். திருமணமாகாத பெண்கள் அன்னையை சிவப்பு மலர்களால் வணங்கி, பொருத்தமான வரன் கிடைக்க பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசியினர் இந்த நவராத்திரி காலத்தில் விரும்பிய படி மிகசிறப்பான பலன்களைப் பெறலாம். தடைப்பட்ட வேலை சிறப்பாக முடிப்பீர்கள். ரிஷப ராசி பெண்கள் இந்த காலத்தில் தங்கள் வாழ்க்கையில் புதிய சாதனையைப் படைப்பீர்கள்.

​மிதுனம்

மிதுன ராசியினர் உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டின் பெரியவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். அன்னையின் அருளால் சிலர் வண்டி, வாகனம் வாங்க வாய்ப்புள்ளது.

கடகம்

மிதுன ராசியினர் உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டின் பெரியவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். அன்னையின் அருளால் சிலர் வண்டி, வாகனம் வாங்க வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசியை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கை, வேலையில் முன்னேற்றம் அடைய உகந்த முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இந்த காலத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல பலன்கள் பெறுவீர்கள். தங்களின் காதலி அல்லது வாழ்க்கைத் துணையுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

சிம்மம்

சூரியன் அதிபதியாக இருக்கும் சிம்ம ராசியினரின் பொருளாதார நிலை மேம்படும். அன்னையின் அருளால், உங்கள் தொழில் துறையில் பதவி உயர்வு பெறலாம். காதல், குடும்ப வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

​கன்னி

கன்னி ராசியினர் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கொண்டிருந்த கவலைகள் நவராத்திரியின் போது நீங்கும். உங்களின் வாழ்க்கை மாற்றத்தை முன்னேற்ற அல்லது நல்ல மாற்றம் பெற சிறந்த முயற்சிகளை எடுப்பீர்கள்.

​துலாம்
துலாம் ராசியினர் நவராத்திரியின் போது அன்னையின் அருளைப் பெற்றிட ஒருநாளாவது உண்ணாவிரதம் இருந்து நன்மைகளைப் பெற்றிடலாம். அதுமட்டுமில்லாமல் வாழ்க்கை குறித்த பயம் நீங்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியை சேர்ந்தவர்களின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் சமாளிப்பீர்கள். குடும்ப சூழ்நிலை நன்றாக இருக்கும், இதன் காரணமாக நீங்களும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். குடும்பத்தில் நேர்மறையான நிகழ்வுகள் நடப்பதோடு, உங்கள் துறையிலும் சாதனை அடையலாம்.

​தனுசு

தனுசு ராசியினர் நவராத்திரியின் போது வாழ்க்கையில் உயரத்தைத் தொடுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பீர்கள். இன்னும் வேலை கிடைக்காதவர்கள் இந்த காலத்தில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். அன்னையின் அருளைப் பெறவும், அவளை மகிழ்விக்க இந்த காலகட்டத்தில் நீங்கள் ஆன்மிகம் தொடர்பான நிகழ்வுகளில் தீவிரமாகப் பங்கேற்பீர்கள்.

மகரம்

மகர ராசியினர் நவராத்திரியின் போது மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்படுவார்கள். மேலும் உங்களின் செயல்பாடு அனைத்து துறைகளிலும் வெற்றியை கொடுக்கும். நவராத்திரி தினத்தில் வெவ்வேறு வடிவ அன்னையை வீட்டிலேயே வழிபடுவதால் உங்களுக்குள் நேர்மறையை உணர்வீர்கள்.

கும்பம்
கும்ப ராசியினர் நவராத்திரியின் போது வணிகம் மற்றும் சமூக மட்டத்தில் மரியாதை பெற முடியும். இதனுடன், குடும்பத்தில் ஏதேனும் ஆன்மிக நிகழ்வுகள் காரணமாக பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

மீனம்

மீன ராசியினர் நவராத்திரியின் போது, நீங்கள் விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். இந்த காலத்தில் பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. உங்களின் பொருளாதார நிலை அன்னையின் அருளால் மேம்படும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 09.10.2021 Today Rasi Palan 09-10-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleமேஷ ராசியினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள் ராஜயோகம் விரைவில் உங்களை தேடி வரும் காலம்!