12 ராசிகளில் பகுத்தறிவு நிரம்பிய புத்திசாலி ராசிக்காரர்கள் யார் யார்? அதில் உங்க ராசி எப்படி?

0

ஒரு மனிதனின் உணர்ச்சி என்பது அது அவனுடைய உணர்ச்சியின் வெளிப்பாடு மட்டுமல்ல. அது உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் உங்களை பற்றி எடுத்துரைக்கும் ஒரு மொழியாகும். இந்த உணர்ச்சி பூர்வமான செயலுக்கும் நம் கிரக நிலைக்கும் நிறையவே சம்பந்தம் உள்ளது. உங்களுடைய ராசி நாதன் தாக்குதல்களைக் கொண்டு தான் இந்த உணர்ச்சிகள் வெளிப்படும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.

அதேபோலத்தான் உங்களுடைய உணர்ச்சிகளால் நீங்கள் முடங்கிப் போய்விடக்கூடாது என்பதை உங்களுக்கு உணர்த்தி, எதையும் பகுத்து ஆராய்ந்து முடிவு செய்யும் ஆற்றலை எந்தெந்த ராசிக்குரிய அதிபதிகள் அதிகமாக தங்களுடைய ராசிக்காரர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்று இங்கே பார்ப்போம்.

இயற்கையிலேயே படைக்கப்பட்ட உயிரினங்களில் மனிதன் தான் அற்புதமானவன். உணர்வுகளை பேச்சின் மூலமாகவோ செயலின் மூலமாகவோ வெளிப்படுத்த தெரிந்தவன். இப்படி ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் உணர்வுகளை புரிந்து கொள்வது மிகவும் கடினமான விஷயமும் கூட. உங்களுடைய உணர்வுகளும் உணர்ச்சிகளும் உங்களை மட்டுமல்ல உங்களை சுற்றி இருப்பவர்களையும் பாதிப்படையச் செய்யும்.

எனவே தான் ஒரு மனிதன் உணர்வுகளை வெளிப்படுத்தும் போது சரி மற்றவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் உணர்ச்சியை வெளிப்படுத்தும் போது மட்டுமே ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ள முடியும். இதற்கு எதையும் பகுத்து ஆராய்கின்ற திறன் பெற்றிருக்க வேண்டும். பகுத்து ஆராயக்கூடிய சக்த் மனிதர்கள் எல்லோருக்குமே இருக்கிறது. அது கிரக நிலைகளுக்கு ஏற்றபடி எப்படி வேறுபடுகிறது. யார் அதிபுத்திசாலியாக இருக்கிறார்கள். யார் மந்தமாக இருக்கிறார்கள் என்பதைத் தான் நாம் கவனிக்க வேண்டும்.

எதார்த்த அறிவு – மகரம், ரிஷபம் மற்றும் கன்னி இவை மூன்றும் நிலத்தை அறிகுறிகளாக கொண்ட ராசி யாகும். இந்த மூன்று ராசிக்காரர்களும் சலிப்பை ஏற்படுத்தும் ராசிக்காரர்கள். காரணம் இவர்கள் உணர்ச்சி செயல்பாட்டிற்கு என்று வரும் போது ரெம்ப பிராக்டிகலாக இருக்கிறார்கள். இவர்கள் பொதுவாக பட்ஜெட் தாக்கம் மாதிரி தான் நடந்து கொள்வார்கள். மற்றவர்கள் தவறுகளை சுட்டிக் காட்ட விரும்புவார்கள். ஆனாலும் அவர்கள் சரியானவர்கள் தான்.

அதீதமாக பகுத்தறியும் நபர்கள் – விருச்சிகம், கடகம் மற்றும் மீனம் நீரை அறிகுறியாக கொண்டவர்கள் இவர்கள். இவர்கள் மிகவும் புத்திசாலித்தனமானவர்கள். மற்றவர்களின் உணர்ச்சியை பகுத்தாய்வு செய்து புரிந்து கொள்ளும் நபர்கள். உணர்ச்சி பூர்வமாக அதே சமயத்தில் ஒழுங்கற்று காணப்படும் நபர்கள். ஆனால் உண்மையில் இவர்களை நெருங்குவது மிகவும் கடினம். நீங்கள் இந்த ராசிக்காரர்களில் ஒருவரை நண்பராக வைத்து இருந்தால் அவர்களுக்கு அருகில் செல்வது ஒரு பெரிய ஒப்பந்தமாக இருக்கும். ரெம்ப விசுவாசமுள்ளவர்களாகவும், நேசிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

ஆராய்ச்சி குணம் மிக்கவர்கள் – துலாம், மிதுனம் மற்றும் கும்பம் காற்றை தன் அடையாளமாகக் கொண்ட ராசிகள் இவை. இந்த மூன்று ராசிக்காரர்களும் எல்லையில்லாத கனவுகளை கொண்டு இருப்பார்கள். இவர்கள் உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் கெட்டிக்காரர்கள் அதற்கேற்றாற் போல் இவர்களின் உணர்திறனும் இருக்கும். இவர்களின் கருத்துகள் எல்லாம் பெரிதாக இருக்கும் ஆனால் அதை செயல்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும்.

உள்ளுணர்வு : சிம்மம், மேஷம் மற்றும் தனுசு இவர்கள் நெருப்பை அடையாளமாகக் கொண்ட ராசிகள். மற்றவர்களை கையாள்வதில் ஒரு முரட்டுத்தனம் இவர்களிடம் இருக்கும். ஆனால் உண்மையாக பார்த்தால் இவர்கள் மிகுந்த துணிச்சல் மிகுந்தவர்கள். இவர்களுக்கு ரிஸ்க்ல ரஸ்க் சாப்பிடற மாதிரி எந்த பிரச்சினை வந்தாலும் முதலில் தலையை நுழைப்பவர்கள். அதே நேரத்தில் வேடிக்கை கொண்டாட்டங்களை இழக்காத ராசிக்காரர்களும் இவர்கள் தான். எனவே இவர்கள் இறங்கி எதையும் செய்யும் போது சிறப்பாக இருக்கும். அவர்களின் பெரிய கருத்துகளை ஒரு நாளும் வெளிப்படுத்த மாட்டார்கள்.

மேஷம் காதல் விரும்பும் மேஷ ராசி அன்பர்களே! நீங்கள் எதையும் நன்கு புரிந்து கொள்வதற்கு முன்பாகவே மிக எளிதில் முன்கோபமும் அடையும் நபர்கள் தான் நீங்கள். இயல்பாகவே உங்களுக்கு பொசுக்கென்று உங்களுக்கு கோபம் வந்து விடும். அதேசமயம் நீங்கள் தன்னிச்சையாகச் செயல்படும் ஆற்றலும் மற்றும் காதல் சாகசங்களை மேற்கொள்ளும் நபராகவும் இருப்பீர்கள். உங்களுடைய நடவடிக்கையால் மற்றவர்கள் பாதிக்கப்படுவார்களா என்பதையெல்லாம் நினைத்து கவலைப்பட மாட்டீர்கள். நீங்கள் மிகவும் மகிழ்ச்சியான நபர். ஆனால் மற்றவர்களுடான உங்கள் பழக்கம் கொஞ்சம் கெடுபிடியாகவே இருக்கும். எந்த ஒரு உந்துதலும் இல்லாமல் உங்கள் காதலை முன்னின்று நடத்தி செல்வீர்கள். இருப்பினும் நீங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் பட்டியலில் குறைவான இடத்தில் இருக்கிறீர்கள்.

ரிஷபம் பிரச்சினைகளை எளிதாகத் தீர்க்கும் ஆற்றல் கொண்டவர்களாக ரிஷப ராசிக்காரர்கள் இருப்பார்கள். நடைமுறையாகவே ரெம்ப தீவிரமாக செயல்படும் நபர்கள். மற்றவர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு எதுவும் சொல்லாமல் அதை தீர்க்க முயற்சிப்பவர்களாக இருப்பீர்கள். வருகின்ற பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு காண வேண்டும் என நினைப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். ஆனால் அதற்குத் தேவையான முயற்சியும் உங்களிடம் இருக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு பிடிவாதமானவர்களாகவும், அதே நேரத்தில் மற்றவர்களுக்கு மிகச் சிறந்த ஆலோசகராகவும் திகழ்வீர்கள். உங்களது அறிவுரையை மற்றவர்கள் கேட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அப்படி நடக்காவிட்டால் அதை சீரியஸாக எடுத்துக் கொள்வீர்கள். சில சமயங்களில் கொஞ்சம் முட்டாள்தனமாகவும் நடந்து கொள்வீர்கள்.

மிதுனம் மிதுன ராசிக்காரர்கள் தங்களுடைய கருத்துகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். நீங்கள் உணர்ச்சிகளைக் கையாள மிகவும் கஷ்டப்படுவீர்கள். பகுத்தாராயும் போது, நடுநிலையில் இல்லாமல், ஒருபக்கமாக சாய்ந்து விடுவீர்கள். தனிப்பட்ட முடிவுகளை எடுக்க மிகவும் சிரமப்படுவீர்கள். உங்கள் அணுகுமுறை, பகுத்தறிவு மூலம் முடிவுகளை மனதில் கொண்டு எடுத்தாலும் மூளையின் ஒப்புதலுக்காக காத்திருந்து செயல்படுவீர்கள். அதே நேரத்தில் நீங்கள் நுட்பமாக கருத்துகளைக் கேட்கும் திறன் படைத்தவர்கள். உணர்ச்சியை வெளிப்படுத்தும் பட்டியலில் நீங்கள் கொஞ்சம் உயர்ந்து காணப்படுகிறீர்கள்.

கடகம் உணர்ச்சியை மற்றவர்களிடம் வெளிப்படுத்தும் பட்டியலில் உயர்ந்த இடத்தை பெற்று, எதையும் இயல்பாக செய்யும் இடத்தில் முதலில் இருப்பது கடக ராசிக்காரர்கள் தான். நீங்கள் அதிகமாக வெட்கப்படும் நபர்கள். எப்பொழுதும் பாதுகாப்பற்றவர்களாக நினைப்பீர்கள். அதனால் எதையுமே யோசிப்பதற்கு நினைப்பீர்கள். உங்களுக்கு நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்வது உறவுகளை புரிந்து கொள்ள அடிப்படையாக அமையும். கடக ராசிக்காரர்கள் தங்களுடைய உணர்வுகளை இசை, கலை மற்றும் பிற வடிவத்தில் மற்றவர்களுடன் இணைத்துக் கொள்வீர்கள். உங்கள் அன்பானவர்களிடம் அதிக விசுவாசம் உள்ளவராக, அவர்கள் செய்வதை பகுத்தாராய மனம் இல்லாமல் மிகுந்த உற்சாகமான நபராகவும் இருப்பீர்கள்.

சிம்மம் இயற்கையாகவே தலைமைப் பொறுப்பை ஏற்று நடக்கும் சிம்ம ராசிக்காரர்கள் பகுத்து அறியும் ஆறற்லை இயல்பாகவே பெற்றிருப்பீர்கள். நீங்கள் சிறந்த தலைவர்களாக விளங்குவீர்கள். எந்த செயலிலும் சுயமாக ஈடுபடும் நபர்கள். மற்றவர்களின் உணர்ச்சிகளை மிகைப்படுத்திக் கொள்ளும் போக்கு உங்களுக்கு உண்டு. நீங்கள் உங்களின் பலவீனங்களையும், வலிமையையும் கண்டு கொள்ள விரும்ப மாட்டீர்கள். அதுவும் தவறு தான். மற்றவர்கள் உங்கள் பலவீனத்தை சுட்டிக்காட்டும் போது அவர்களை வெறுப்பீர்கள். உங்களுடைய அன்பை ஒரு குறிப்பிட்ட நபர்களிடம் மட்டுமே காட்டுவீர்கள். இருப்பினும் நீங்கள் உணர்ச்சியை கையாளும் பட்டியலில் கீழே உள்ளீர்கள்.

கன்னி நடைமுறையில் விரும்புவதை செய்யும் கன்னி ராசி அன்பர்களே! ஒவ்வொரு சூழ்நிலையையும் பகுப்பாய்வு செய்யும் நபர்கள் நீங்கள். நடைமுறையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கும் அணுகுமுறை உங்களுக்கு இருக்கும். ஒரு சூழ்நிலையை தவிர்ப்பதோடு பிரச்சினையை ஒட்டுமொத்தமாக கையில் எடுக்காமல் ஆராய்ந்து தீர்வு காண்பீர்கள். ஆனால் அதே நேரத்தில் உணர்ச்சிகளைக் கையாளவும் சிரமப்படுவீர்கள். ஆனால் மற்ற ராசிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது உங்களின் உணர்ச்சியை கையாளும் திறன் உங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. நீங்கள் சிறந்த சுய பரிசோதனை நபராக இருப்பதால் உங்கள் உணர்ச்சியை எளிதாக வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பீர்கள்.

துலாம் மற்றவர்களுக்காக அனுசரித்துப் போகும் துலாம் ராசிக்காரர்கள் எல்லா ராசிக்காரர்களிலும் உணர்ச்சி ரீதியில் நடுநிலையாக இருப்பவர்கள் நீங்கள். எல்லாரையும் அரவணைத்துச் செல்வதில் கெட்டிக்காரர்கள் துலாம் ராசிக்காரர்கள். மற்றவர்களுடைய தேவையை அறிந்து நடந்து கொள்வீர்கள். தங்களுடைய உணர்ச்சிகளை ஆராய்ந்து, கணக்கிட்டு வெளியிடுவதில் வல்லவர்கள் இவர்கள். மற்றவர்களை துன்புறத்திடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருப்பார்கள். இதனாலே அவர்களை சுற்றி நிறைய நண்பர்கள் வட்டாரம் எப்பொழுதும் இருக்கும். இதனால் அவர்களின் உணர்ச்சிகளை மொழிபெயர்க்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு கிடையாது. நீங்கள் மோதல்களை அதிகமாக வெறுப்பீர்கள். எனவே பிரச்சினைகளைத் தவிர்ப்பது அல்லது தள்ளி விட்டு சென்று விடுவார்கள்.

விருச்சிகம் பழிவாங்கும் தன்மை கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே! நீங்கள் எப்பொழுதும் சூடான விவாதித்தல் ஈடுபடுவீர்கள். கண்டிப்பாக சண்டை என்பது உங்களின் ஆயுதமாக இருக்கும். எனவே உணர்ச்சியை வெளிப்படுத்தும் பட்டியலில் நீங்கள் தாழ்வாக உள்ளீர்கள். எனவே உங்களுக்கு நெருக்கமான நபர்களை பெற கஷ்டப்படுவீர்கள். ஆனால் நீங்கள் சிறந்த சுய பரிசோதனை செய்யும் நபர்கள். எனவே உங்கள் உணர்ச்சியை கையாள்வதில் கொஞ்சம் சிறந்து விளங்குகிறீர்கள்.

தனுசு தேவையானவற்றை நிறைவேற்றுவதில் சாமர்த்தியமான தனுசு ராசி அன்பர்களே உங்களை எளிதாக நம்ப முடியாது. இயற்கையிலேயே நீங்கள் குறைந்த ஆற்றலை கொண்டு இருப்பதால் உங்களை ஒரு இடத்தில் கட்டிப் போடுவது என்பது மிகவும் சிரமம். தங்களுக்கு தேவையானவற்றை நிகழ்த்துவதில் சாமர்த்தியம் ஆனவர்கள். இருப்பினும் உணர்ச்சியை வெளிப்படுத்தும் பட்டியலில் இவர்கள் குறைந்த இடத்திலே இருக்கிறார்கள். தங்கள் சொந்த உணர்வுகளை புறக்கணித்து விடுவதால் மற்றவர்களுடன் உணர்ச்சி பிணைப்பு கடினமாகவே இருக்கிறது. மற்றவர்களின் உணர்வுகளை கேட்பதற்கு இவர்களுக்கு நேரம் இருக்காது. ஏனெனில் தங்களின் ஆற்றலை மேம்படுத்த எப்பொழுதும் சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டியிருக்கும்.

மகரம் உணர்ச்சியை வெளிப்படுத்த கூட நேரமில்லாத மகர ராசி அன்பர்களே! மகர ராசிக்காரர்களிடமிருந்து உணர்ச்சி ஆதரவை ஒரு போதும் எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் அது கிடைக்காது. எனவே தான் உங்கள் உணர்ச்சி நிலை மிகவும் தாழ்வாக உள்ளது. இருப்பினும் இது உங்களை தட்டடியெழுப்பவும் போவதில்லை. மற்றவர்கள் பிரச்சினைக்கு நடைமுறையிலினான தீர்வுகளை கூறுவார்கள். அறிவுறுகளை நன்கு சிந்தித்து பேசுவார்கள். அதை கவனிக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பார்கள். உங்கள் உணர்ச்சிகளை பட்டியலிடும் பொறுமை உங்களுக்கு இருக்காது. எனவே அவர்களுக்கு அறிவுரை கூறி மாற்றுவது என்பது கடினமாக இருக்கும்.

கும்பம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் பயப்படும் கும்ப ராசி அன்பர்களே! உங்களிடம் நிறைய தத்துவார்த்தமான கருத்துக்கள் இருக்கும். இதனால் உங்களின் முற்போக்கான கருத்துக்கள் உணர்ச்சி பூர்வமாக அறிவார்ந்ததாக இருக்காது. நீங்கள் உணர்ச்சிகளை எதிர்கொள்வதில் மிகவும் பதட்டமாக இருப்பீர்கள். உணர்வுப் பூர்வமாக நீங்கள் பேசுவதை காட்டிலும் எதையும் செய்ய மாட்டீர்கள். வெளிப்படையாக இருப்பதை வெறுப்பீர்கள், அதை தங்களுடைய பலவீனமாக நினைப்பீர்கள். ஆனால் நீங்கள் பிரச்சினைகளை அறிவு சார்ந்து தீர்வு காண்பீர்கள். எனவே பிரச்சினைகளை கடந்து செல்வது கடினமாக இருக்கும்.

மீனம் மிகுந்த உணர்திறன் கொண்ட மீன ராசி அன்பர்களே! எல்லா ராசிக்காரர்களை விட அதிகமாக உணர்ச்சியை வெளிப்படுத்தும் நபர்கள் நீங்கள். தங்களோடு உணர்ச்சியை வெளிப்படுத்துவதில் மட்டுமல்ல மற்றவர்களின் உணர்வுகள் மீதும் மிகவும் மென்மையானவர்களாக இருப்பார்கள். மிகுந்த அனுதாபத்தையும் அன்பையும் கொண்டு நீங்கள் இருப்பதால் மற்றவர்களுக்கும் உங்களை பிடிக்கும். யாரையும் துண்டிக்க விரும்பமாட்டார்கள். எனவே மற்றவர்களால் எளிதில் காயமடைந்து வேதனைக்குள்ளாவார்கள். உங்கள் உணர்ச்சியை வெளிப்படுத்தும் திறன் அடிப்படையில் நான்கு வகைகளாக பிரிக்கிறோம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவேகமாக கருத்தரிக்க ஒரு நாளைக்கு எத்தனை முறை கலவி கொள்ள வேண்டும்?
Next articleஇந்த ராசிக்காரர்கள் கடும் கோபக்காரர்களாம்?.. இருந்தாலும் ரகசியத்தை மட்டும் ஒரு போதும் வெளியே சொல்லமாட்டார்கள்!