வைத்தியர்களின் அலட்ச்சியத்தால் துடிதுடித்து உயிரிழந்த நபர்!

0

மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்த பொது வைத்தியர்களின் கவனகுறைவால் குறித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளனார்.

இச்சம்பவத்தில் மேலும் தெரிவிக்கையில் 73 வயது ஆன முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், இச்சம்பவம் அமெரிக்க தென்னஸி மாநிலத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

லபாயெட் எனும் இடத்தைச் சேர்ந்த ஜோன் பேர்ன்ஸ் ஜோன்ஸன் என்ற நபரே சத்­தி­ர­சி­கிச்சை நிபு­ணர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட தவறான சிகிச்சையால் கடும் வேத­னையை அனு­ப­வித்த நிலையில் உயி­ரி­ழந்­துள்ளார்.

நஷ்­வில்­லே­யி­லுள்ள றைஸ்டார் வைத்தியசாலையில் சத்­தி­ர ­சி­கிச்சை பூர்த்­தி­ய­டைந்­த­தற்கு 9 மணித்­தி­யா­லங்­களின் பின்­னரே, சத்திர சிகிச்­சையை மேற்­கொண்ட மருத்­து­வ­ரான ஸ்ரீகுமார் சுப்­பி­ர­ம­ணியன் சத்திர சிகிச்­சைக்குப் பயன்­ப­டுத்­தப்­பட்ட ஊசி­களில் ஒன்று காணாமல் போயுள்­ளதை அவ­தா­னித்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து அவரும் அவ­ரது வைத்தியக் குழு­வி­னரும் ஜோன்­ஸனின் இரு­தயப் பகு­தியில் திரும்­பவும் மேல­தி­க­மாக 3 மணி நேர சத்திர சிகிச்­சையை முன்­னெ­டுத்து அவ­ரது மார்பில் வைத்து தைக்­கப்­பட்ட ஊசியை மீட்கும் செயற்­பாட்டில் ஈடு­பட்­டனர். ஆனால் அவர்­க­ளுக்கு அந்த ஊசியைக் கண்­டு­பி­டித்து அகற்­று­வது சாத்­தி­ய­மா­க­வில்லை.

இந்­நி­லையில் முயற்­சியைக் கைவிட்டு அவ­ரது மார்புப் பகு­தியை மீண்டும் வைத்திய­ர்கள் தைத்­துள்­ளனர். இந்­நி­லையில் தொடர்ந்து 30 நாள்கள் சொல்­லொண்ணா வேத­னை­யையும் துன்­பத்­தையும் அனு­ப­வித்த ஜோன்ஸன் இறு­தியில் உயிரிழந்தார்.

இத­னை­ய­டுத்து ஜோன்­ஸனின் குடும்­பத்­தினர் றைஸ்டார் வைத்தியசாலைக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­துள்­ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்தியாவில் நேர்ந்த கதி! கனடாவில் படிக்கும் தமிழ் மாணவிக்கு!
Next articleஉடல் இளைக்க வேண்டுமா! இதோ உங்களுக்கு சில பாட்டியின் கை மருத்துவம்!