மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்த பொது வைத்தியர்களின் கவனகுறைவால் குறித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்துள்ளனார்.
இச்சம்பவத்தில் மேலும் தெரிவிக்கையில் 73 வயது ஆன முதியவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், இச்சம்பவம் அமெரிக்க தென்னஸி மாநிலத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
லபாயெட் எனும் இடத்தைச் சேர்ந்த ஜோன் பேர்ன்ஸ் ஜோன்ஸன் என்ற நபரே சத்திரசிகிச்சை நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட தவறான சிகிச்சையால் கடும் வேதனையை அனுபவித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
நஷ்வில்லேயிலுள்ள றைஸ்டார் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பூர்த்தியடைந்ததற்கு 9 மணித்தியாலங்களின் பின்னரே, சத்திர சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவரான ஸ்ரீகுமார் சுப்பிரமணியன் சத்திர சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட ஊசிகளில் ஒன்று காணாமல் போயுள்ளதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து அவரும் அவரது வைத்தியக் குழுவினரும் ஜோன்ஸனின் இருதயப் பகுதியில் திரும்பவும் மேலதிகமாக 3 மணி நேர சத்திர சிகிச்சையை முன்னெடுத்து அவரது மார்பில் வைத்து தைக்கப்பட்ட ஊசியை மீட்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களுக்கு அந்த ஊசியைக் கண்டுபிடித்து அகற்றுவது சாத்தியமாகவில்லை.
இந்நிலையில் முயற்சியைக் கைவிட்டு அவரது மார்புப் பகுதியை மீண்டும் வைத்தியர்கள் தைத்துள்ளனர். இந்நிலையில் தொடர்ந்து 30 நாள்கள் சொல்லொண்ணா வேதனையையும் துன்பத்தையும் அனுபவித்த ஜோன்ஸன் இறுதியில் உயிரிழந்தார்.
இதனையடுத்து ஜோன்ஸனின் குடும்பத்தினர் றைஸ்டார் வைத்தியசாலைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.