வெளியான வாக்குமூலம்! 14 வயது சிறுமியை ஒருதலையாக காதலித்த 2 குழந்தைகளின் தந்தை! தலையை துண்டித்தது ஏன்?

0

சேலம் மாவட்டத்தில் 8 ஆம் வகுப்பு படித்து வரும் ராஜலட்சுமி என்ற 14 வயது சிறுமியை திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கும் கார்த்திக் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

மாணவியின் தலையை துண்டித்து ரோட்டில் வைத்துவிட்டு தப்பி ஓட முயன்ற அவரை பிடித்து பொது மக்கள் போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

பொலிசார் விசாரணையில் கார்த்திக் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் ராஜலட்சுமியை ஒருதலையாக காதலித்து வந்தேன, அவர் பள்ளிக்கு சென்று வரும்போதெல்லாம் அவரை பின்தொடர்ந்து செல்வேன்.

இதுகுறித்து ராஜலட்சுமி தனது தந்தையிடம் தெரிவித்து விடுவேன் என மிரட்டியதால் அவரை கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

மேலும், என்னை கொன்று விடுங்கள் என பொலிசாரிடம் கெஞ்சியுள்ளார். மேலும் நான் வெளியில் சென்றால், இதுபோல் வேறு யாரையாவது கொலை செய்து விடுவேன். எனவே என்னை உயிருடன் விட்டு விடாதீர்கள். தயவு செய்து என்னை கொன்று விடுங்கள்.

என்னை ரெயில் தண்டவாளத்தில் படுக்க வையுங்கள் என்று கூறியுள்ளார்.

தினேஷ்குமாருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவியும், செல்வதரணிஷ் என்ற மகனும் உள்ளனர்.

சாரதா கூறியதாவது, எனது கணவர் அடிக்கடி சைக்கோ போல நடந்து கொள்வார். திடீரென மரத்தை வெட்டுவார். எப்போதும் ஏதாவது முணு முணுத்துக்கொண்டே இருப்பார்.

தான் சுடுகாட்டில் படுத்து தூங்குவேன் என்று கூறுவார். கோபத்தில் ஆவேசமாக திட்டுவார். உறவினர்களை அடிப்பார். அடிக்கடி சாமியும் ஆடுவார் என கூறியுள்ளார்.

தற்போது, இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே வரும் கணவர்! 44 குழந்தைகளை பெற்ற 40 வயது பெண்!
Next articleமுக்கிய அறிவிப்பு: புதிய கட்சியை ஆரம்பிக்கிறார் முதல்வர் விக்னேஸ்வரன்