தமிழகத்தைச் சேர்ந்த இளைஞன் வெளிநாட்டில் கொத்தடிமையாக இருப்பதாக தாய் புகார் கொடுத்ததையடுத்து, அவரை மீட்க வெளியேற மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உதவியுள்ளார்.
திருப்பூரை அடுத்த குளத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். பனியன் கம்பெனியில் டெய்லராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருப்பூர் கலெக்டர் பழனிசாமியிடம் அளித்த மனுவில், என் மகன்களான மணித்துரை (23), மணிகண்டன் (21) ஆகியோரை குடும்ப வறுமையால் வேலைக்காக வெளிநாடு அனுப்ப முயன்றேன்.
அவிநாசியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் 2.70 லட்சம் ரூபாய் பெற்று இருவரையும் தாய்லாந்து நாட்டிலுள்ள பனியன் கம்பெனிக்கு ஜனவரி மாதம் அனுப்பி வைத்தார். ஆனால் அங்கு ஹோட்டலில் வேலைக்கு சேர்த்துள்ளனர். சம்பளமும் வழங்கப்படவில்லை. கொத்தடிமையாக பணிபுரிந்துள்ளனர்.
Thiru Manithurai is being rendered all help & guidance by our Embassy @IndiainThailand to facilitate his exit from Thailand. We are also keeping his family in Tiruppur updated of the situation. https://t.co/MOJr396kB7
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) June 25, 2019