வெளிநாட்டிலிருந்து வவுனியா வந்த இளைஞன் தூக்கில்!

0

வவுனியா – கோவில்குளம் பகுதியில் நேற்று இரவு தூக்கில் தொங்கிய நிலையிலிருந்த இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கோவில்குளத்தில் தனது பெற்றோருடன் வசித்து வந்த 28 வயதுடைய லதுசன் என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த இரண்டு மாத காலத்திற்குள் வெளிநாடு ஒன்றில் பணிபுரிந்து இலங்கை திரும்பியுள்ளதாக தெரியவருகிறது.

குடும்பத்தினருடன் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக குறித்த இளைஞன் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையை எந்த நேரத்திலும் தாக்கும் ஆபத்து! கொழும்பை அண்மித்துள்ள சூறாவளி!
Next articleஏழ்மையான ஒருவர் கோடீஸ்வரராக மாறியது எப்படி? இலங்கையரின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம்!