தென்னிந்திய சினிமாவில் நடிகைகளின் சம்பளம் மிக குறைவாகவே இருக்கும். ஆனால் பாலிவுட் ஹீரோயின்கள் மிக அதிகமாகவே சம்பளம் வாங்குகின்றனர். பிரியங்கா சோப்ரா ஒரு படத்திற்க்கு 13 கோடி ருபாய் வரை சம்பளம் கேட்கிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது நடிகை திஷா பாட்னி தற்போது டைகர் ஷ்ராப்புடன் இணைந்து ஒரு எண்ணெய் கம்பெனியின் விளம்பரத்தில் நடிக்க 5 கோடி ருபாய் சம்பளமாக கேட்டுள்ளார்.
பாகி 2 படத்தில் ஒன்றாக நடித்த இந்த ஜோடிக்கு இளம் ரசிகர்கள் அதிகம் உள்ளனர். அதனால் அந்த நிறுவனம் 5 கோடி கொடுக்க ஒப்புக்கொண்டதாம்.
இந்த விளம்பரத்திற்காக ஷூட்டிங் விரைவில் நடக்கும் என கூறப்படுகிறது.