விறகு சேகரிக்க சென்ற நபருக்கு சிக்கிய வினோத கடிதம்!

0

அமெரிக்காவில் விறகு சேகரிக்க சென்ற நபருக்கு 50 வருடங்களுக்கு முன் எழுதிய வினோத கடிதம் ஒன்று சிக்கியதால், அந்த கடிதத்தை அவர் தன்னுடைய பேஸ் புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர் டெய்லர் இவனோப். இவர் அங்கிருக்கும் கடற்கரைக்கு விறகு சேகரிக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு கிடந்த பாட்டில் ஒன்றை பார்த்த போது, அந்த பாட்டிலின் உள்ளே துண்டு காகிதம் இருப்பதைக் கண்டுள்ளார்.

இதனால் அந்த பாட்டிலை எடுத்து, துண்டு காகிதத்தில் என்ன எழுதியிருந்தது என்பதை பார்க்க ஆவலாக இருந்த அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏனெனில் அதில் எழுத்துக்கள் ரஷ்ய மொழியில் இருந்ததால், என்ன எழுதியிருந்தது என்பது தெரியாமல், அதை புகைப்படமாக எடுத்து, எனக்கு ரஷ்ய மொழி தெரியாது என்பதால் ரஷ்ய மொழி தெரிந்த நபர்கள் இதில் என்ன இருக்கிறது என்பதை எனக்கு படித்து சொல்லுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

இதனால் இந்த பதிவு சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. அதன் பின் இந்த கடிதத்தைக் கண்ட ரஷ்ய மொழி தெரிந்த ஒருவர், ரஷிய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்து எழுதுகிறேன். இதைக் கண்டுபிடிப்பவர்கள் 43, வி.ஆர்.எக்ஸ்.எப். சுலாக் விலாதிவோஸ்தோக் என்ற முகவரிக்கு பதில் எழுதவும். நீங்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள் என்று எழுதப்பட்டிருந்தது.

மேலும் அதை எழுதியவர் கேப்டன் அனடோலி போட்சனேகோ என்பதும், வருடம் ஜூன் 20, 1969 என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது என்று விளக்கமளித்தார்.

இதையடுத்து ரஷிய செய்தி நிறுவனம் கேப்டன் அனடோலி போட்சனேகோவை கண்டுபிடித்து, அவரிடம் இந்த கடிதம் பற்றி கேட்டது, அவர் என்னுடைய 35 வயதில் இதை விளையாட்டாக செய்தேன். இந்த கடிதம் எதுவரை போகும் என்று பார்க்கலாம் என்ற எண்ணத்தில் அனுப்பியதாக சிரித்து கொண்டே கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒரு குழந்தையைப் பார்த்ததும்! வா(டகைத்) தாய் மூலம் குழந்தை பெற்ற தம்பதி!
Next articleபெண்களை விட ஆண்களை மட்டுமே அதிகம் தாக்கும் 7 நோய்கள்!