வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க சில டிப்ஸ்!

0

கோடை காலம் வந்துவிட்டது அதோடு சேர்ந்து வியர்வை துர்நாற்றமும் நம்மை ஆட்கொள்ளும். கவலை கொள்ள தேவையில்லை. கீழ்காணும் முறைகளை கடைபிடித்தாலே போதும்.

* 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து, அதை அக்குளில் தடவி சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தினமும் சில வாரங்கள் தொடர்ந்தாலே போதும்.

* ஒரு பஞ்சு உருண்டையை எடுத்து ஆல்கஹாலில் நனைத்து, அதை அக்குளில் தடவி சில நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும்.

* ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சு உருண்டையில் நனைத்து, அதை அக்குளில் தடவி 2-3 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்தால் பல கிடைக்கும்.

* சிறிது ரோஸ் வாட்டரை அக்குளில் தடவலாம் அல்லது குளிக்கும் நீரில் சிறிது ரோஸ் வாட்டரை கலந்து குளித்தால் துர்நாற்றம் நீங்கும்.

* தக்காளி கூழை நேரடியாக அக்குளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி சில வாரங்கள் தினமும் பின்பற்றி வர வேண்டும்.

* தினமும் குளிக்கும் முன், ஒரு துண்டு எலுமிச்சையை அக்குளில் தேய்த்து அது நன்கு காய்ந்த பின்பு குளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் உடல் துர்நாற்றம் விரைவில் மறையும்.

* சந்தன பவுடரை எடுத்து அதில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி நன்கு காய வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி செய்து வர வியர்வை நாற்றம் மற்றும் அக்குளில் உள்ள கருமை நீங்கும்.

Previous article07.09.2018 இன்றைய ராசிப்பலன் ஆவணி 22, வெள்ளிக்கிழமை!
Next articleஇந்த பொடியை பயன்படுத்தி வாயு சம்மந்தப்பட்ட‌ பிரச்சனையை உடனடியாக‌ விரட்ட முடியும்!