வார ராசிப்பலன் செப்டம்பர் 16 முதல் 22 வரை !

0

கிரக மாற்றம்
17–09-2018 கன்னி சூரியன் காலை 06.47 மணிக்கு
19-09-2018 கன்னி புதன் அதிகாலை 04.14 மணிக்கு

இவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்
விருச்சிகம் 14-09-2018 இரவு 07.12 மணி முதல் 17-09-2018 அதிகாலை 04.51 மணி வரை.
தனுசு 17-09-2018 அதிகாலை 04.51 மணி முதல் 19-09-2018 மாலை 05.22 மணி வரை.
மகரம் 19-09-2018 மாலை 05.22 மணி முதல் 22-09-2018 காலை 06.15 மணி வரை.
கும்பம் 22-09-2018 காலை 06.15 மணி முதல் 24-09-2018 மாலை 05.21 மணி வரை.

இவ்வார சுப முகூர்த்த நாட்கள்
20.09.2018 புரட்டாசி 04 ஆம் தேதி வியாழக்கிழமை ஏகாதசி திதி உத்திராடம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை

மேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.
எந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் குரு சஞ்சரிப்பதும் வரும் 17-ஆம் தேதி முதல் சூரியன் ருணரோக ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதும் சகல விதத்திலும் ஏற்றத்தை தரக்கூடிய உன்னதமான அமைப்பாகும். நீண்ட நாள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடும்.

கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடந்த கால கடன் பிரச்சினைகள் எல்லாம் குறையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். பொன், பொருள் சேரும் வாய்ப்பு அமையும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேலும் தொழிலை விரிவு படுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 20, 21, 22.
சந்திராஷ்டமம் – 14-09-2018 இரவு 07.12 மணி முதல் 17-09-2018 அதிகாலை 04.51 மணி வரை.

ரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.
பிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு ஓரளவுக்கு ஏற்ற இறக்கமானப் பலன்களே உண்டாகும் என்றாலும் உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 9-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் எதையும் சமாளிக்ககூடிய ஆற்றலை அடைவீர்கள். பண வரவுகளில் சிறுசிறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். 6-ல் குரு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக செயல்படுவது நல்லது.

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்தே இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. கிடைக்க வேண்டிய வாய்ப்புகளிலும் தடங்கல்கள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் சற்று கால தாமதமாகும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலையே இருக்கும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதும், தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வதும் உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் – 16, 22.
சந்திராஷ்டமம் – 17-09-2018 அதிகாலை 04.51 மணி முதல் 19-09-2018 மாலை 05.22 மணி வரை.

மிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.
எந்த வித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக ஏற்றத்தை தரும் அமைப்பாகும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும்.

சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழியில் சுபசெய்திகள் வந்து சேரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். சிவ வழிபாடும், அம்மன் வழிபாடும் செய்வதும் நற்பலன்களை அளிக்கும்.

வெற்றி தரும் நாட்கள் – 16, 17, 18.
சந்திராஷ்டமம் – 19-09-2018 மாலை 05.22 மணி முதல் 22-09-2018 காலை 06.15 மணி வரை.

கடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.
கற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே ஜென்ம ராசிக்கு 4-ல் சுக்கிரன், 6-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். வரும் 17-ஆம் தேதி முதல் சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிக்க உள்ளதால் குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும்.

உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலம் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்வதும், முருக வழிபாடு செய்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 17, 18, 19, 20, 21.
சந்திராஷ்டமம் – 22-09-2018 காலை 06.15 மணி முதல் 24-09-2018 மாலை 05.21 மணி வரை.

சிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.
தனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் பலவகையில் முன்னேற்றங்களை பெறுவீர்கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். வரும் 17-ஆம் தேதி முதல் சூரியன் 2-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடித்து விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமதப்பலன் கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். ராகு காலங்களில் துர்கையம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.

வெற்றி தரும் நாட்கள் – 20, 21, 22.

கன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.
எவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்தே செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் தாராள பணவரவு ஏற்பட்டு கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவை அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் சற்று குறையும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விட முடியும். தொழிலாளர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டார தொடர்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும், விநாயகரையும் வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள் – 16, 22.

துலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.
வசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், முயற்சி ஸ்தானமான 3-ல் சனி சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல் இருக்கும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.

குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நற்பலனை தரும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். சிவ வழிபாடும், முருக வழிபாடு செய்வதும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 17, 18, 19.

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.
முன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், கேது சேர்க்கைப் பெற்று 3-ல் சஞ்சரிப்பதும், வரும் 17-ஆம் தேதி முதல் சூரியன் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.

சிலருக்கு வெளியூரில் பணிபுரியும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் கல்வியில் நல்ல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். நவகிரக வழிபாடு செய்தால் நன்மைகள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 16, 20, 21.

தனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.
பல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று 11-ல் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபகரமான பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். 2-ல் கேது 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது.

திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். வரும் 17-ஆம் தேதி முதல் சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடும், அம்மன் வழிபாடும் செய்தால் மேன்மையான பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 17, 18, 19, 22.

மகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.
மனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய், கேது 10-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் எந்தவொரு காரியத்திலும் உணர்ச்சி வசப்படாமல் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது உத்தமம்.

திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடனை பெறுவதில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்க கூடும் என்பதால் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் தங்கள் பணிகளை மட்டும் செய்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள் – 16, 20, 21.

கும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.
உண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதும் 11-ல் சனி சஞ்சரிப்பதும் சிறப்பு என்பதால் உங்களுக்கு தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் ஏற்படும். பயணங்களால் பெரிய மனிதர்களின் நட்பும் அதன் மூலம் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலும் விட்டு கொடுத்து சென்றால் ஒற்றுமை குறையாது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.

பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வரும் 17-ஆம் தேதி முதல் சூரியன் அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிப்பதால் உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளிலும் சிறப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். முருக வழிபாடும், விநாயகர் வழிபாடும் செய்தால் சிறப்பான பலன்கள் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 16, 17, 18, 19, 22.

மீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .
மற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் ஓரளவிற்கு சாதகமான பலன்கள் ஏற்படும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று குறையும். 8-ல் குரு சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. வரும் 17-ஆம் தேதி முதல் சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும்.

உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் நெருங்கியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கும் சூழ்நிலை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. சிவ வழிபாடும், தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

வெற்றி தரும் நாட்கள் – 17, 18, 19, 20, 21.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஏன் எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை வழிபடுவார்கள் காரணம் தெரியுமா ?
Next articleஒல்லியான முடியை அடர்த்தியாக மாற்ற‌ வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க!