வவுனியாவில் வீட்டிற்கு வெளியே சென்ற குடும்ப பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0

வவுனியாவில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட குடும்பஸ்தரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஈச்சங்குளம் பகுதியில் வசித்த வந்த விவசாயியான கனகசிங்கம் கதிர்காமநாதன் (46 வயது) என்பவருடைய சடலமே இதன்போது மீட்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் கணவன் நித்திரைக்கு சென்றதாகவும், இன்று அதிகாலை வெளியே சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் மனைவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஈச்சங்குளம் பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விசாரணைகளின் பின் சடலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்படவுள்ளதுடன், குடும்ப பிரச்சினையே தற்கொலைக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநடந்த விபரீத சம்பவம்! ஆடு மேய்த்து படிக்க வைத்த கணவனை பார்த்து மனைவி சொன்ன வார்த்தை!
Next article07.10.2018 இன்றைய ராசிப்பலன் புரட்டாசி 21 ஞாயிற்றுக்கிழமை !