வவுனியாவில்! மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி!

0

வவுனியா – தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தாண்டிக்குளம் இராணுவ உணவகத்திற்கு முன்பாக இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது,

இன்று காலை 7மணியளவில் தாண்டிக்குளம் இராணுவ உணவகத்திற்கு முன்பாக இராணுவத்தினரின் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில், நிகழ்வினை ஒழுங்கு படுத்துவதற்கு பொருட்களை ஏற்றிவந்த இராணுவத்தினரின் கனரக வாகனம் உணவகப் பகுதிக்கு செல்ல முற்பட்ட போது மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 25 வயதுடைய அன்ரணி யோகேஸ்வரன் அனுஸாந்தன், 18 வயதுடைய அனுஸாந்தன் பவித்திரா ஆகிய இருவரும் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே பிரமண்டு வித்தியாலயத்திற்கு முன்பாக கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிஸார் குறித்த மோட்டார் சைக்கிளினை வழிமறித்துள்ளதாகவும் குறித்த மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் நிறுத்தாமல் சென்றதாகவும் அப்பகுதில் கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleரூபாவின் பெறுமதி இலங்கை வரலாற்றில் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது!
Next articleமட்டக்களப்பு – தாளங்குடாவில் தூக்கிட்டு ஆசிரியர் தற்கொலை! காதல் விவகாரத்தால்!