வீடொன்றில் இருந்து இளம் தம்பதி சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளனர்.
வவுனியா புளியங்குளம் பரிசங்குளம் பகுதியில் வீட்டிலிருந்து கணவன் , மனைவி இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர்.
வவுனியா கனகராயன் குளத்தைச் சேர்ந்த இவ்விருவரும் பரிசங்குளத்தில் உள்ள தமது உறவினர் வீட்டில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
19 வயதுடைய மனைவி தூக்கில் தொங்கிய நிலையிலும் அவருக்கு அருகில் கணவனும் சடலமாக மீட்கப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: