ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 கடகம் !

0

நல்ல அறிவாற்றலும், கற்பனைத்திறனும் எதிலும் சிந்தித்து செயல்படும் குணமும் கொண்ட கடக ராசி நேயர்களே! இது நாள் வரை ஜென்ம ராசியில் ராகு 7-ல் கேதுவாக சஞ்சரித்த சர்ப்ப கிரகங்கள் வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை ராகு 12-ஆம் வீட்டிலும், கேது 6-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் யாவும் மறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களிலும் ஈடுபடும் வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியமும் அற்புதமாக அமைவதால் அன்றாட பணிகளில் திறம்பட வெயல்பட்டு வெற்றிகளை பெறுவீர்கள்.

குரு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டிலும், சனி 6-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் பண வரவுகளுக்கு பஞ்சம் இருக்காது. கடன்கள் யாவும் குறையும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சுப காரியங்கள் யாவும் தடையின்றி கைகூடும். புத்திர பாக்கியமும் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்– வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் நல்ல லாபத்தை அடைய முடியும். கொடுத்த கடன்கள் தடையின்றி வசூலாகும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும்.

எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொன் பொருள் சேரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஒத்துழைப்புடன் செயல்படுவதால் அபிவிருத்தியும் பெருகும். எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகளும் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும், இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் மனநிம்மதியை ஏற்படுத்தும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். 29-10-2019 முதல் குரு 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் பணவிஷயங்களில் நிதானமாக செயல்படுவது நல்லது. கேதுவும், சனியும் சாதகமாக சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து எல்லா வகையிலும் நற்பலன்களை பெறுவீர்கள்.

உடல் ஆரோக்கியம்
உடல் ஆரோக்கியம் மிகச் சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட கூடிய ஆற்றல் உண்டாகும். அலைச்சல் டென்ஷன்கள் குறையும். குடும்பத்தில் உள்ளவர்களால் இருந்து வந்த மருத்துவ செலவுகள் மறையும். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து கொண்டு இருப்பவர்களுக்கு படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும். அனைவரும் சுபிட்சமாக இருப்பதால் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

குடும்பம் பொருளாதாரநிலை
பண வரவுகள் மிகச் சிறப்பாக இருப்பதால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்க கூடிய யோகம் அமையும். புத்திர வழியில் மகிழ்ச்சி, பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும்.

உத்தியோகம்
பணியில் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்க பெறுவதால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும். எதிர் பார்த்து காத்திருந்த ஊதிய உயர்வுகளும், பதவி உயர்வுகளும் தடையின்றி கிடைக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விரும்பம் நிறைவேறும் புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதிலும் திறம்பட செயல்பட முடியும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலையிருப்பதால் லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கொடுக்கல்- வாங்கல்
பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நல்ல லாபத்தை பெறுவீர்கள். கொடுத்த கடன்கள் யாவும் தடையின்றி வசூலாகும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையும். வம்பு வழக்கு போன்றவற்றில் தீர்ப்பு சாதகமாக வரும்.

அரசியல்
பெயர் புகழ் உயரக்கூடிய காலமாக இருக்கும். மக்களின் ஆதரவுகள் பெருகுவதால் அவர்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய கூடிய ஆற்றல் உண்டாகும். உங்கள் பேச்சிற்கு அனைத்து இடங்களிலும் ஆதரவுகள் பெருகும். வருவாய்கள் அதிகரிக்கும். கட்சிப் பணிகளுக்காக அடிக்கடி பயணங்களையும் மேற்கொள்வீர்கள். பத்திரிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சி அளிக்கும். உடனிருப்பவர்கள் அனுகூலமாக செயல்படுவார்கள்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலையும் கிட்டும். வேலையாட்களின் ஒத்துழைப்பால் லாபம் பெருகும். நவீன முறைகளை கையாண்டு பயிர் விளைச்சலை பெருக்குவீர்கள். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்களும் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பூமி மனை வாங்கும் வாய்ப்பு அமையும்.

கலைஞர்கள்
மக்களின் ஆதரவும், ரசிகர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாகவே இருக்கும். கிடைத்த வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொண்டால் சிறிய பட்ஜெட் படம் என்றாலும் நல்ல பெயரை வாங்கித் தரும். வர வேண்டிய பணத்தொகைகளில் சற்று இழுபறி நிலை இருந்தாலும் வர வேண்டிய நேரத்தில் கைக்கு கிடைக்கும். படப்பிப்பிற்காக செல்லும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கார் பங்களா போன்றவற்றை வாங்கும் வாய்ப்பு அமையும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படுவீர்கள். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். சுப காரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பொன் பொருள் சேரும். சொந்த வீடு வாகனங்களை வாங்குவீர்கள். தாய் வழி சொத்துக்களால் அனுகூலப்பலன்களை பெற முடியும்.

மாணவ மாணவியர்
கல்வியில் முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்தபடி நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டினைப் பெறுவீர்கள். கல்விக்காக சுற்றுலா தலங்களுக்கு செல்வீர்கள். நல்ல நட்புகளால் அனுகூலப்பலன் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் பரிசுகளைப் பெறுவார்கள். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை, தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை போன்ற யாவும் விலகும்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 12-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 6-ல் உத்திராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும்.

பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்து கூட்டாளிகளிடம் விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன் சுமைகள் சற்று குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டு போட்டிகளிலும் திறம்பட செயல்பட்டு பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனை வழிபாடு செய்வது உத்தமம்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 12-ல் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 6-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதும், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் சற்றே குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள்.

பொன், பொருள் போன்றவற்றை வாங்கி சேர்க்க முடியும். வீடு, வாகனம் போன்றவற்றையும் வாங்கும் சந்தர்ப்பங்கள் அமையும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளையும் கௌரவமான பதவி உயர்வுகளையும் அந்தஸ்துகளையும் பெற முடியும். தொழில், வியாபாரம் தடையின்றி நடைபெற்று எதிர்பார்த்த லாபம் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். தினமும் விநாயகரை வழிபடுவது சிவனை வணங்குவது நல்லது.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 12-ல் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 6-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதும், 5-ல் குரு, 6-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்பதால் பலவகையில் முன்னேற்றங்களை பெற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண, சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். நல்ல வரன்கள் கிடைக்கும்.

உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கௌரவமான நிலை இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகளும் அமையும். திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறுவதால் மனமகிழ்ச்சி உண்டாகும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களையும் பெற முடியும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக அமையும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். வரும் 29-10-2019 முதல் குரு 6-ல் சஞ்சரிக்க உள்ளதால் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்வது உத்தமம்.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை
ராகு கேது ஜென்ம ராசிக்கு 6, 12-ல் தன் சொந்த நட்சத்திரங்களில் சஞ்சரிப்பதும், 6-ல் சனி சஞ்சாரம் செய்வதும் சாதகமான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாவதால் சிறிது மருத்துவ செலவு ஏற்படும். கணவன் -மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார், உறவினர்களும் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.

கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளாலும் ஒரளவுக்கு அனுகூலம் ஏற்படும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளாலும் லாபம் கிட்டும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை
ராகு ஜென்ம ராசிக்கு 12-ல் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 6-ல் மூல நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதும், 6-ல் சனி சஞ்சாரம் செய்வதும் நல்ல அமைப்பு என்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம்.

திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் சில போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய லாபத்தை அடைந்து விடுவீர்கள். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடப்பதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும் என்றாலும் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத இட மாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது.

அதிர்ஷ்டம் அளிப்பவை

எண் – 1,2,3,9

நிறம் – வெள்ளை, சிவப்பு

கிழமை – திங்கள்,வியாழன்

கல் – முத்து

திசை – வடகிழக்கு

தெய்வம் – வெங்கடாசலபதி

பரிகாரம்
கடக ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 12-ல் ராகு சஞ்சரிப்பதால் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது. மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது அம்மனுக்கு குங்கும அபிஷேகம் செய்வது, கருப்பு ஆடைகள், கைகுட்டை போன்றவற்றை பயன்பயன்படுத்துவது நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎண்ணில் அடங்காத நோய்களை குணப்படுத்த சூடா வெந்தய நீர்!
Next articleரத்த அழுத்தத்தை மாத்திரையின்றி கட்டுக்குள் வைத்திட நாட்டு வைத்தியங்கள்!