ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 மிதுனம்!

0

பார்வைக்கு வெகுளிப் போல இருந்தாலும் தன்னுடைய காரியங்கள் அனைத்தையும் எளிதில் சாமர்த்தியமாக சாதித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே! வாக்கிய பஞ்சாங்கப்படி வரும் 13-02-2019 முதல் 01-09-2020 வரை சர்ப கிரங்களான ராகு ஜென்ம ராசியிலும், கேது 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பது சற்று சாதகமற்ற அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது, கூட்டு தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. குரு ருணரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டிலும், சனி சமசப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் தேவையற்ற மறைமுக எதிர்ப்புகள், வம்பு வழக்குகள், அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட வேண்டி இருக்கும்.

வரும் 29-10-2019 முதல் குரு 7-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும். பொருளாதார நிலையும் தேவைக்கு ஏற்றபடி இருப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் படிப்படியாக குறையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். வீடு, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்பட்டால் நல்ல லாபத்தை பெற முடியும். பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பது முன்ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று போட்டிகளை எதிர்கொண்டே முன்னேற்றம் அடைய முடியும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வந்தாலும் சற்று அலைச்சல்களும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு செய்யும் பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடைகளுக்குப் பின் கிடைக்கும். உயர் அதிகாரிகளால் சிறுசிறு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடன் பணி புரியவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் ஏற்படுவதால் குடும்பத்தை விட்டு பிரிய நேரிடும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது.

உடல் ஆரோக்கியம்
உடல் நிலை சோர்வடையும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்து கொள்வது நல்லது. எதிர்பாராத வீண் விரயங்களும் ஏற்படும் என்றாலும் உங்கள் பணியில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தேவையற்ற மன குழப்பங்கள் ஏற்படுவதால் மன நிம்மதி குறையும்.

குடும்பம் பொருளாதாரநிலை

குடும்ப சூழ்நிலை ஒரளவுக்கு மகிழ்ச்சிகரமாக இருக்கும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும் என்பதால் நிதானம் தேவை. அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்றாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. சுப காரியங்கள் சில தடைகளுக்குப் பின் நடைபெறும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்க்கொள்வீர்கள்.

உத்தியோகம்
பணியில் வேலைபளு அதிகமாக இருந்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் உங்களது நெருக்கடிகளை குறைக்க உதவும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் குரு மாற்றத்திற்குப் பின் எளிதில் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் குறைவாக இருந்தாலும் வரவேண்டிய வாய்ப்புகளுக்கு தடை இருக்காது. நிறைய போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்கு பின் கிடைக்கும். கூட்டாளிகளை அனுசரித்து
செல்லவும்.

கொடுக்கல்- வாங்கல்
பொருளாதாரநிலை தேவைக்கு ஏற்றபடி இருந்தாலும் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். தேவையற்ற வம்பு வழக்குகளாலும் சங்கடங்கள் ஏற்படும். குரு மாற்றத்திற்குப் பின் எதிலும் ஓரளவுக்கு முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

அரசியல்
மக்களின் தேவையறிந்து செயல்பட்டால் பெயர் புகழை காப்பாற்றி கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக நிறைய வீண் செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். மறைமுக வருவாய்கள் குறைவதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாகவே இருக்கும். தேவையற்ற பயணங்களையும் மேற்கொள்வீர்கள். மேடை பேச்சுகளில் கவனமுடன் செயல்படுவது உடன் பழகுபவர்களிடமும் எச்சரிக்கையுடன் இருப்பது, பத்திரிக்கையாளர்களை பகைத்து கொள்ளாதிருப்பது உத்தமம்.

விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருக்கும். பட்ட பாட்டிற்கான பலனைப் பெறுவதில் இடையூறுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் மானிய உதவிகள் தடை தாமதங்களுக்குப் பின் கிடைக்கும். சந்தையில் விளைபொருளுக்கு ஏற்ற விலை குரு மாற்றத்திற்குப் பின் கிடைக்கும். பொருளாதார ரீதியாக சிறுசிறு நெருக்கடிகள் உண்டானாலும் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைப்பதால் எதையும் சமாளித்து விட முடியும்.

கலைஞர்கள்
தகுந்த பாத்திரங்களுக்காக காத்து இருக்காமல் கிடைப்பதைப் பயன்படுத்திக் கொள்வது நல்லது. போட்டி, பொறாமைகள் அதிகரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கைநழுவிப் போகும். சுகபோக வாழ்க்கையிலும் பாதிப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தவும். குரு மாற்றத்திற்குப் பின் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். வரவேண்டிய பணத் தொகைகள் கிடைத்து கடன்கள் குறையும்.

பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், கை, கால் மூட்டுகளில் வலி போன்றவை தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு சில தடைகளுக்குப் பின் நல்ல வரன்கள் அமையும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. பண வரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது மூலம் கடன்களை குறைக்க முடியும். உறவினர்களின் ஆதரவு சுமாராக அமையும்.

மாணவ மாணவியர்
கல்வியில் சற்று மந்தமான நிலையே இருக்கும் என்றாலும் சற்று முழு முயற்சியுடன் செயல்பட்டால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களை பெற முடியும். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கை உங்களை வேறுபாதைக்கு அழைத்து செல்லும் என்பதால் எதிலும் கவனம் தேவை. எதிர்பார்க்கும் அரசு உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்கள் உதவிகரம் நீட்டுவார்கள்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது உத்திராட நட்சத்திரத்தில் 13-02-2019 முதல் 16-04-2019 வரை
ராகு ஜென்ம ராசியில் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 7-ல் உத்திராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பதாலும் 6-ல் குரு, 7-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் ஏற்ற, இறக்கமான பலன்களையே அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகும். முடிந்த வரை பயணங்களை தவிர்த்து விடுவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும்.

கணவன்- மனைவி இடையே ஏற்படக் கூடிய தேவையற்ற வாக்குவாதங்களால் மனநிம்மதி குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை யாருக்கும் கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்துச் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். ராகு, கேதுவுக்கு சர்பசாந்தி செய்வது உத்தமம்.

ராகு புனர்பூச நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 17-04-2019 முதல் 20-08-2019 வரை
ராகு ஜென்ம ராசியில் புனர்பூச நட்சத்திரத்திலும், கேது 7-ல் பூராட நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதாலும் 6-ல் குரு, 7-ல் சனி சஞ்சாரம் செய்வதாலும் கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பண வரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலையே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறுசிறு வீண் செலவுகளை சந்திக்க நேரிடலாம். உடல்நிலை சோர்வாக இருப்பதால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியாமல் போகும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம்.

தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் அதிகரிப்பதால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி இருக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் தடைப்படும். கூட்டாளிகளும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். பணம் கொடுக்கல் -வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படுவதோடு பிறர் செய்யும் தவறுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. ராகு கேதுவுக்கு சர்ப சாந்தி செய்வது உத்தமம்.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது பூராட நட்சத்திரத்தில் 21-08-2019 முதல் 24-12-2019 வரை
ராகு ஜென்ம ராசியில் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 7-ல் பூராட நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் 29-10-2019 முதல் குரு 7-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எந்தவித எதிர்ப்புகளையும் சமாளித்து முன்னேறக்கூடிய ஆற்றல் உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்கள் மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். திருமண சுப காரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.

புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். செய்யும் தொழில், வியாபார ரீதியாக ஒரளவுக்கு மேன்மைகளை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவுபடுத்தும் நோக்கம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும் என்றாலும் தேவையற்ற பயணங்களால் அலைச்சல், டென்ஷன்கள் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொள்வது உத்தமம். தேவையற்ற நண்பர்களின் சேர்க்கையை தவிர்க்கவும். சனிக்குரிய பரிகாரங்களை செய்வது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.

ராகு திருவாதிரை நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 25-12-2019 முதல் 20-05-2020 வரை
ராகு ஜென்ம ராசியில் திருவாதிரை நட்சத்திரத்திலும், கேது 7-ல் மூல நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் குரு 7-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். செய்யும் தொழில், வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் கிட்டும்.

வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகளால் லாபம் கிட்டும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அனைவரையும் அனுசரித்து செல்வது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்பத்தில் ஓரளவுக்கு சுபிட்சமான நிலையே இருக்கும். வீடு, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன்கள் படிப்படியாக குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. துர்கையம்மனை வழிபடுவது உத்தமம்.

ராகு மிருகசீரிஷ நட்சத்திரத்தில், கேது மூல நட்சத்திரத்தில் 21-05-2020 முதல் 01-09-2020 வரை
ராகு ஜென்ம ராசியில் மிருகசீரிஷ நட்சத்திரத்திலும், கேது 7-ல் மூல நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்றாலும் குரு 7-ல் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்து பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் உடனே சரியாகி விடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது உத்தமம். அசையும், அசையா சொத்துகளால் எதிர்பாராத அனுகூலங்களை பெற முடியும்.

திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகள் சற்று சாதகமற்று செயல்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தநிலை நிலவும் என்பதால் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தினமும் விநாயகப்பெருமானை வழிபடுவது உத்தமம்.

அதிர்ஷடம் அளிப்பவை

எண் – 5,6,8,

நிறம் – பச்சை, வெள்ளை

கிழமை – புதன், வெள்ளி

கல் – மரகதம்

திசை – வடக்கு

தெய்வம் -விஷ்ணு

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகடிகாரத்தின் மூலம் தமிழுக்கு உயிர் கொடுத்த தமிழன்! தீயாய் பரவும் புகைப்படம்!
Next articleகால்சியம் படிகங்கள் தேங்குவதால் ஏற்படும் குதிகால் வலியை போக்க அருமையான வழி!