யாழ். சுழிபுரம் பகுதியில் சிறுமி ரெஜினா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபர்கள் மூவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஆசிர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினா சார்பில் சட்டத்தரணி க.சுகாஷ் ஆஜராகியிருந்தார்.
யாழ். சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதி சிறுமி ரெஜினா கொலை செய்யப்பட்ட நிலையில், கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: