யாழ்ப்பாணத்தில் வயோதிப தம்பதியர் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
உடுப்பிட்டிச் சந்தியில் அமைந்துள்ள வீடொன்றில் புகுந்த மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் நேற்றுமுன்தினம் அதிகாலை 2.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த வயோதிபத் தம்பதியர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நள்ளிரவில் வீட்டிற்குள் வலுக்கட்டாயமாக புகுந்த நபர்கள் வயோதிபத் தம்பதியரைத் தாக்கியுள்ளனர்.
இதன்போது அவர்களிடமிருந்து இரண்டு கைப்பேசிகளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.
கும்பலின் தாக்குதலில் காயமடைந்த தம்பதியர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: