யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் சற்றுமுன் விபத்து!

0

யாழில் -நெள்ளுக்குளம் பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற ரயில் விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தின் போது 55 வயதுடைய தயா என்ற முதியவரே உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், மக்கள் பாவனை இல்லாத வீதியில் சென்ற அவர், ரயில் கடவையை கடக்க முற்பட்ட போதே உயிழிந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 3.4.2018
Next articleபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை- அதிர்ச்சியில் பிரபலங்கள்!