மூன்று வயது குழந்தை! பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்!

0

இராஜாங்கனை – சோலேபுர பகுதியில் தாக்குதலுக்கு இலக்காகிய மூன்று வயதான குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது பாட்டியுடன் வீட்டில் இருந்த வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலுக்கு இலக்கான குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தது.

பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தம்புத்தேகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதன்பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

எனினும், சிகிச்சை பலனளிக்காத நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிறந்த தேதிப்படி எந்த விலங்கினங்களின் குணங்கள் உங்களுக்கு இருக்கும் என்று தெரியுமா!
Next articleஉங்கள் ராசிக்கு இந்த கடவுளை வணங்குங்கள்! செல்வம், அதிர்ஷ்டம் கொட்டுமாம்!