செலவே வேண்டாம்!! பெண்களின் முன்னழகை அழகாக்கும் இயற்கை வழிகள்!

0

பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் மார்பகங்கள். இந்த பிரச்சினையை பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும் பெண்கள் தான் அதிகம் சந்திப்பார்கள்.

மேலும் இப்படி மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களால் தாங்கள் விரும்பிய ஆடைகளைத் தான் அணிய முடியும்.

ஏனெனில் ஒருசில ஆடைகளை அவர்களை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும். பொதுவாக மார்பகங்கள் வயதாகினால், தாய்ப்பால் கொடுப்பதால், சரியான உள்ளாடைகளை அணியாததால், ஊட்டச்சத்து குறைப்பாட்டினால், இறுதி மாதவிடாய் நெருங்கினால் மற்றும் புவி ஈர்ப்பு விசையினால் தொங்க ஆரம்பிக்கும்.

ஆனால் பெண்கள் தங்களின் மார்பகங்கள் தொங்கி காணப்படுவதற்கான காரணங்கள் தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.

தொங்கும் மார்பகங்களை ஒரு சில இயற்கை வழிகளின் மூலம் சரிசெய்யலாம். தரையில் படுத்துக் கொண்டு இரு முனை பளுக்கருவியை(Dumbbell) கொண்டு மார்பகங்களுக்கு மேலே தூக்கி 10 வரை எண்ணிக் கொண்டு பிடித்திருக்க வேண்டும்.

பின் அதனை மார்பகங்களுக்கு பக்கவாட்டில் மடக்கி 10 வரை எண்ணிப் பிடிக்க வேண்டும். இது போல் தினமும் 10 முறை செய்தால், மார்பகங்களின் தளர்ச்சியைத் தடுக்கலாம்.

குப்புறப்படுத்துக் கொண்டு, கைகளை தரையில் மார்பங்களுக்கு நேராக நீட்டி உடலே மேலே தூக்கி, கால்களை மேல்புறமாக தூக்கி, தரையைத் தொடாமல் முன்புறமாக குனிந்து 10 வரை எண்களை எண்ணி, பின் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல வேண்டும்.

இதுபோன்று தினமும் 10 முறை செய்து வந்தாலும், தொங்கும் மார்பகங்களை சரிசெய்யலாம்.

தினமும் 15 நிமிடம் கையால் மேல்புறமாக மார்பகத்தை மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மார்பகத்தில் இரத்த ஓட்டமானது அதிகரித்து, மார்பகங்களில் உள்ள திசுக்கள் மற்றும் தசைகளை வலிமையாக்கி, மார்பகங்கள் தளர்ந்து இருப்பதை சரிசெய்யும்.

ஐஸ் கட்டிகளை எடுத்து மார்பகத்தின் மீது வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும்.இப்படி செய்யும் மசாஜானது ஒரு நிமிடத்திற்கு மேல் செய்யக் கூடாது. இல்லாவிட்டால், ஐஸ் கட்டிகளானது மார்பகங்களில் கட்டிகளை ஏற்படுத்திவிடும்.

இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செயது வந்தால், மார்பக தசைகளானது வலிமையடையும். பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் மார்பகங்களை மசாஜ் செய்து வந்தாலும், மார்பகங்களானது இறுக்கமடைய ஆரம்பிக்கும்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் இயற்கையான பல பொருட்களை கொண்டு உங்கள் மார்பகங்களின் அளவை பெரிதாக்க முடியும்.

பெருஞ்சீரகம்/சோம்பு

மார்பகங்களை மேம்படுத்தவும், தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கவும், இந்த பொதுவான மசாலாவை பாரம்பரியமாக பயன்படுத்தி வருகின்றனர்.

மார்பக அளவை பெரிதாக்க உதவும் பல பொருட்களைப் போல, பெருஞ்சீரகமும் அதன் வேலையை கச்சிதமாக செய்கிறது.

பெருஞ்சீரகம் உங்களுக்கு ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்களை வழங்குகிறது. இது உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜெனை போன்றதே. பெருஞ்சீரகத்தை தேநீராக அல்லது உணவில் கலந்து உட்கொள்ளலாம்.

பெருஞ்சீரக எண்ணெய்யை மார்பகங்களின் மீது நேரடியாக தடவலாம். பெருஞ்சீரகத்தில் கூடுதல் மருத்துவ குணங்கள் உள்ளது. இரத்த கொதிப்பு, நெறிப்பு, மாதவிடாய் இன்மை, ஆஸ்துமா போன்றவைகளுக்கு சிகிச்சையளிக்க இதனை பயன்படுத்தலாம்.

பெண்களுக்கு பாலியல் ரீதியாக ஊக்குவிக்கவும் இது உதவும். பெருஞ்சீரகத்தில் பைடோ-நியூட்ரியன்ட்டுகள் அதிகமான எண்ணிக்கையில் உள்ளது. இது மார்பாக அளவை அதிகரிக்க உதவும்.

நிகழக்கூடிய பக்க விளைவுகள்

செலரி, கேரட் போன்றவைகள் உங்களுக்கு அலர்ஜி என்றால் பெருஞ்சீரகத்தாலும் உங்களுக்கு அலர்ஜி ஏற்படலாம். சூரிய ஒளியில் உங்கள் சருமத்தின் உணர்ச்சியை அதிகரிக்க செய்யும் பெருஞ்சீரகம். இதனால் சூரிய ஒளியால் உங்கள் சருமம் எரியும்.

நீங்கள் மென்மையான சருமத்தை கொண்டுள்ளீர்கள் என்றால் போதிய சன்ஸ்க்ரீன் க்ரீமை முன்னெச்சரிக்கையாக பயன்படுத்துங்கள்.

சிவப்பு தீவனப்புல் (Red Clover)

அனைத்து வகையான பொதுவான நோய்களை குணப்படுத்த இந்த மூலிகை உதவும். ஆனால் பெரிய மார்பகங்களை அளிக்க உதவும் என்ற அதன் உண்மையான ஆற்றல் பலருக்கும் தெரிவதில்லை.

சிவப்பு தீவனப்புல்லில் ஜெனிச்டீன் போன்ற பல்வேறு ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் வளமையாக உள்ளது. இந்த பொருள் குறிப்பாக உங்கள் மார்பகங்களை மேம்படுத்த உதவுகிறது.

அதற்கு காரணம் இது மனித ஈஸ்ட்ரோஜென் ஏற்பிகளுடன் உடனடியாக இணைந்திடும். மேலும் மார்பக வளர்ச்சியை கட்டுப்படுத்துவது இது தான்.

நிகழக்கூடிய பக்க விளைவுகள்

சிவப்பு தீவனப்புல்லால் சில பெண்களுக்கு குமட்டல், தலைவலி, தசை வலி மற்றும் புணர்புழை இரத்த ஒழுக்கு ஏற்படலாம். நீங்கள் இரத்த கசிவு கோளாறால் அவதிப்பட்டு வந்தால், சிவப்பு தீவனப்புல் உங்கள் இரத்த கசிவை மேலும் அதிகரிக்கும். அதனால் பரிந்துரைக்கப்பட்ட அளவை தாண்டாமல் இதனை கவனமாக பயன்படுத்தவும்.

வெந்தயம்

பழங்காலம் முதல் ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது வெந்தயம். ஆயுர்வேதம் என்பது 4000 ஆண்டு கால பழமையான மருத்துவ முறை என்பதை நீங்கள் அறிவீர்கள். குழம்பு பொடியில் இதனை பலரும் பயன்படுத்துவார்கள்.

மேலும் பல உணவுகளுக்கும் டெசர்ட்களுக்கும் சுவை மணமூட்டவும் இது பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் அதிலுள்ள ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்களுக்காகவும் இது அறியப்படுகிறது. உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவு குறைவாக இருந்தால், மார்பக வளர்ச்சி இருப்பதில்லை.

வெந்தயம் ப்ரோ-லாக்டினையும் வழங்குகிறது. இதுப்போக, தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். மார்பக வளர்ச்சியையும் மேம்படுத்தும் ப்ரோ-லாக்டின்.

நிகழக்கூடிய பக்க விளைவுகள்

உணவில் உள்ள அளவை விட வெந்தயத்தை அதிகமாக உண்ணும் போது, வயிற்று வலி, வாய்வு, பொருமல், வயிற்று போக்கு, இருமல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் மற்றும் முக வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

உணர்திறன் மிகைப்பால் அவதிப்படுபவர்களுக்கு தீவிரமான அலர்ஜிகள் ஏற்படலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயத்தை உண்ணும் போது இரத்ததில் சர்க்கரை அளவு குறையக் கூடும்.

காட்டு வள்ளி கிழங்கு

பெண்களின் இனப்பெருக்க சம்பந்தமான பிரச்சனைகளுக்கு பல நூற்றாண்டுகளாக டானிக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது காட்டு வள்ளி கிழங்கு. இறுதி மாத விடாய் அறிகுறிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தைலமாகவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மார்பக வளர்ச்சியையும் இது மேம்படுத்தும். அதன் பயனைப் பெற அதனை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். சிறந்த பலனைப் பெற வேண்டுமானால், இதனை வெந்தயத்துடன் சேர்த்து உட்கொள்ளவும்.

அதற்கு காரணம், மார்பக பெரிதாக்கும் குணங்களைக் கொண்டுள்ள ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் வெந்தயத்தில் உள்ளது.

நிகழக்கூடிய பக்க விளைவுகள்

அதிகமாக உட்கொள்ளும் போது வாந்தி ஏற்படலாம். புரதம் S குறைபாடு உள்ளவர்கள் இதனை உட்கொள்ளும் போது, இரத்த உறைகட்டிகள் உருவாகும் இடர்பாடு அதிகரிக்கும்.

ஸா பால்மெட்டொ (Saw Palmetto)

வீங்கிய சுக்கிலவகம் என அழைக்கப்படும் தீங்கற்ற சுக்கிலவகம் மிகைப்பெருக்கம் என்ற அழற்சி நிலைக்கு ஸா பால்மெட்டொ மூலிகையின் விதைகளை நிவாரணமாக பயன்படுத்துகின்றனர்.

இருப்பினும் மார்பக அளவை பெரிதாக விரும்பும் பெண்கள் ஸா பால்மெட்டொ மூலிகையையும் பயன்படுத்தலாம். டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும் போது அதனை ஆள இந்த மூலிகை உதவும். இது அதிகமாக இருக்கும் போது மார்பக வளர்ச்சி தடைப்படும்.

நிகழக்கூடிய பக்க விளைவுகள்

மிதமான பக்க விளைவுகள், குமட்டல், மயக்கம், தலைவலி, வாந்தி, மலச்சிக்கல் மற்றும் வயிற்று போக்கு.

குறிப்பு

இந்த மூலிகைகள் எல்லாம் தீமையை ஏற்படுத்தாமல் பாதுகாப்பானதாக தெரியலாம். ஆனால் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அது உங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.

பரிந்துரைக்கப்பட்ட அளவுகளை விட அதிகமாக உண்ணும் போது, அது ஆபத்தாய் முடியும் என சமீப காலமாக நடத்தப்பட்டு வரும் பல ஆய்வுகள் கூறுகிறது. இது உடல் ரசாயனத்தின் இயற்கையான சமநிலையை பாதிக்கும். அதனால் அதிகமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

உங்களுக்கு ஏற்கனவே அலர்ஜிகள் இருந்தால், இந்த மூலிகைகளை உட்கொள்வதற்கு முன்பு சோதித்து பார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தற்போது இருக்கும் அலர்ஜி நிலையை இந்த மூலிகைகள் இன்னும் மோசமடைய செய்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு வேறு ஏதேனும் மருத்துவ பிரச்சனை இருந்தாலோ அல்லது நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ, இவைகளை உட்கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை கலந்தாலோசியுங்கள். இந்த மூலிகைகள் உங்கள் மீது எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தாமல் உள்ளதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழில் இறுதி சடங்கில் ஏற்பட்ட கத்தி குத்தில்! ஐவர் படுகாயம்
Next articleஇத பாருங்க நீங்க ஷாக் ஆகிடுவீங்க! ஒல்லியாக கவர்ச்சி காட்டிவந்த தீராத விளையாட்டு பிள்ளை