முதல் ஆளாக அரையிறுதிப்போட்டிக்குள் நுழைந்து அசத்தல்! உருகுவேவை திரும்பவிடாமல் அடித்த பிரான்ஸ்!

0

உருகுவே அணிக்கு எதிரான போட்டியில் பிரான்ஸ் அணி 2-0 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முதல் ஆளாக நுழைந்துள்ளது.

உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி ரஷ்யாவின் முக்கிய மாகாணங்களில் நடைபெற்று வருகிறது. நாக் அவுட் சுற்றுகள் முடிந்த நிலையில் இன்று காலிறுதிப் போட்டிகள் துவங்கின.

முதல் காலிறுதி போட்டியில் பிரான்ஸ் – உருகுவே அணிகள் மோதின. உருகுவே அணியில் முக்கிய வீரரான கவானி காயம் காரணமாக களம் இறங்கவில்லை.

ஆனால் பிரான்ஸ் அணி முழு பலத்துடன் களம் இறங்கியது. போட்டியில் முதலில் இருந்தெ பிரான்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது.

இருப்பினும் உருகுவே அணியின் டிபென்ஸ்-ஆல் பிரான்ஸ் கோல் அடிக்க திணறின.

இதற்கிடையே உருகுவே அணியும் கோல் அடிக்க முயற்சி செய்தன. ஆட்டத்தின் 40-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்கு ப்ரீ ஹிக் வாய்ப்பு கிடைத்தது.

கிரிஸ்மான் பந்தை உதைக்க வரானே அதை தலையால் முட்டி கோலாக்கினார்.

இதனால் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. இதன் காரணமாக முதல் பாதியில் எவ்வளவு முயன்றும் உருகுவே அணியால் கோல் அடிக்க முடியவில்லை.

முதல் பாதி நேரத்தில் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

இதைத்தொடர்ந்து இரண்டாவது பாதி நேரத்தில் 61-வது நிமிடத்தில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இருந்து கிரிஸ்மான் பந்தை புயல் வேகத்தில் அடித்தார்.

அதை உருகுவே கோல்கீப்பர் தடுத்து விட முயன்றார். அப்போது பந்து அவரது கையில் பட்டு கோல் கம்பத்திற்குள் நுழைந்தது. இதனால் பிரான்ஸ் 2-0 என முன்னிலைப் பெற்றது.

உருகுவே அணி 0-2 என்று பின் தங்கியதால், அந்தணி ஆபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பலமுறை பிரான்ஸ் கோல் எல்லைக்குள் பந்தை கடத்திச் சென்றது. ஆனால் அவற்றை வெற்றிகரமான வகையில் கோலாக மாற்ற முடியவில்லை.

90 நிமிடம் முடிந்து காயம் மற்றும் ஆட்டம் தடையை கணக்கிட்டு கூடுதலா 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது. என்றாலும் உருகுவே அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் பிரான்ஸ் 2-0 என உருகுவேயை வீழ்த்தி உலகக்கிண்ணப் போட்டியில் முதல் ஆளாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொடூரமாக வெட்டி கொலை செய்த கும்பல் ! மகளின் மானத்தை காக்க போராடிய தந்தை!
Next articleயாழில் அபூர்வ மரம்! ஆச்சிரியத்துடன் காணும் மக்கள்