இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியினால் மனிதன் சோம்பேறி ஆகிவிட்டான் என்று மட்டும் சொல்லமுடியாது. மாறாக தொழில்நுட்ப வசதிகளின் உதவியுடன் குற்றங்களை செய்வதும் அதனை மறைப்பதையும் அதிகமாகி வருகின்றன.
நம்முடைய வசதிக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம் என்றாலும் அதனுடைய பயன்பாடு அதன் மீதான தாக்கம் எல்லாம் பல மடங்கு வீரியம் கொண்டதாகவே இருந்திடுகிறது. இயந்திரங்களுக்கு உணர்வு,பாசம் ஆகியவற்றை பற்றியெல்லாம் தெரியாது.
கட்டளையிட்டால் செய்யும் அவ்வளவு தான். பாசம் பற்றி பேச வேண்டுமென்றால் முதலிடத்தில் நிற்பது அம்மா மட்டுமே. அவளது பாசத்திற்கும் அன்பிற்கும் ஈடு இணை எதுவும் இல்லை என்றே சொல்லலாம்.
அது மனிதனுக்கு மட்டும் அல்ல, உயிருள்ள அனைத்து விலங்குகளுக்கும் கூட பொருந்தும். தாய், தந்தையின் பாசம் எல்லை இல்லாதது என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது. ஆனால் இங்கே ஒரு தாய் பறவை தனது முட்டைகளை பாதுகாக்க உயிரை தியாகம் செய்ய கூட தயாராக இருக்கின்றது.
அந்த தருணம் அந்த பறவை இறந்திருந்தால் சாதாரணமாக தூக்கி வீசியிருப்பார்கள். ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.