முகத்தில் வயதான தோற்றம் தெரியுதா? அதை போக்குவதற்காக 10 பலன் தரும் குறிப்புகள்!

0

ஏஜ் ஸ்பாட்ஸ் பொதுவாக பிரவுன் ஸ்பாட்ஸ் அல்லது லிவர் ஸ்பாட்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்பாட்ஸ் பொதுவாக சூரிய ஒளி படும் இடங்களில் தோன்றுகிறது. முகம், கழுத்து, தோள்பட்டை, கை, முதுகு, மார்பு போன்ற இடங்களில் தோன்றுகிறது.

தொடர்ச்சியான சூரிய ஒளி அந்த பகுதிகளில் படும் போது தோலில் உள்ள மெலனோசைட் நிற மாறி தோலில் அடர்ந்த புள்ளிகளை உண்டாக்குகிறது. இது அபாயமானது கிடையாது. இது பொதுவாக வயதான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும்.

இதை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இதற்காக நாங்கள் உங்களுக்கு 10 எளிய இயற்கை வழிகளை கூற யுள்ளோம். சரி வாங்க இப்பொழுது அதைப் பற்றி பார்க்கலாம்

ஆப்பிள் சிடார் வினிகர் ஒரு சிறந்த சருமத்திற்கு புத்துயிர் கொடுக்கும் பொருளாக செயல்படுகிறது. இதில் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் உள்ளது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அழிக்கிறது.

பயன்படுத்தும் முறை

ஒரு காட்டன் பஞ்சில் ஆப்பிள் சிடார் வினிகரை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவிக் கொள்ளவும்.
இரவு முழுவதும் அப்படியே விட்டு விடவும்.
நீங்கள் சென்ஸ்டிவ் சருமம் பெற்றிருந்தால் இதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளவும்.
ஆலிவ் ஆயில் சருமம் வறண்டு போவதை தடுக்கும்.
நல்ல மாற்றம் பெற இந்த முறையை தினமும் செய்யவும்.
எலும்பிச்சையில் இயற்கையான ப்ளீச்சிங் பொருள் உள்ளது. எனவே இது சருமத்திற்கு ஒரு ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்படுகிறது. இது உங்கள் சருமத்தில் உள்ள மெலனின் நிறமியை உடைத்து சருமத்திற்கு புத்துயிர் கொடுக்கிறது.

இதை அப்ளே செய்த பிறகு நீங்கள் சூரிய ஒளியில் செல்ல கூடாது. ஏனெனில் இது உங்கள் சருமத்தை மேலும் கருமையாக்கும்.

உங்கள் சருமம் சென்ஸ்டிவ் சருமமாக இருந்தால் எலும்பிச்சை அரிப்பு மற்றும் சிவந்த நிறத்தை உங்கள் தோலில் ஏற்படுத்தும். எனவே எலும்பிச்சையை மறக்காக ரோஸ் வாட்டரில் கலந்து கொண்டு பயன்படுத்துங்கள்.

பயன்படுத்தும் முறை

எலும்பிச்சையை துண்டுகளாக்கி பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவ வேண்டும்
இப்பொழுது இந்த ஜூஸை 15-20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.
பிறகு சாதாரண நீரில் கழுவவும்
உங்கள் தோலில் உள்ள புள்ளிகள் மறையும் வரை இதை தினமும் செய்யவும்.
பட்டர் மில்க்கில் நிறைய லாக்டிக் அமிலம் உள்ளது. இது ஏஜ் ஸ்பாட்ஸ்யை நீக்கி சருமத்தை வெண்மையாக்குகிறது. இது உங்கள் சருமத்திற்கு எந்த எரிச்சலையும் ஏற்படுத்தாது.

பயன்படுத்தும் முறை

ஒரு கப்பில் பட்டர் மில்க்கை எடுத்து கொள்ளவும்
அதில் காட்டன் பஞ்சை நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்
பிறகு 15-20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்
சாதாரண நீரில் கழுவவும்
எண்ணெய் சருமமாக இருந்தால் இதனுடன் எலும்பிச்சை ஜூஸ் கலந்து கொள்ளவும்
உங்கள் சரும புள்ளிகள் போகும் வரை தினமும் இதை தடவவும். நல்ல மாற்றத்தை காணலாம்
வெங்காயத்தில் உள்ள சல்பர் ஒரு ஆன்டி செப்டிக் மாதிரி செயல்பட்டு சருமத்திற்கு புத்துயிர் மற்றும் இறந்த செல்களை நீக்குகிறது. ஆனால் இது உங்களுக்கு நீங்கள் எதிர்பார்க்காத பலனை கொடுக்கும்.

பயன்படுத்தும் முறை

வெங்காயத்தை வெட்டி பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவ வேண்டும்
10-20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்
அதன் வாசனை போன பிறகு தண்ணீரை கொண்டு கழுவவும்
தினமும் இதை உங்கள் சருமத்தில் உள்ள ஏஜ் ஸ்பாட்ஸ் மறையும் வரை செய்யவும்.
பப்பாளி உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்குகிறது. இதிலுள்ள என்ஜைம்கள் மற்றும் ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம் போன்றவை அடங்கியுள்ளன. இது ஏஜ் ஸ்பாட்ஸ், சரும பிரச்சினைகள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.

பயன்படுத்தும் முறை

பச்சை பப்பாளியை வெட்டி அதன் துண்டுகளை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்
பாதிக்கப்பட்ட இடத்தில் ப்ரஷ்ஷான பப்பாளி யை கொண்டு தேய்க்கவும்
மசாஜ் செய்து 10-20நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும்
தினமும் இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்
கற்றாழை ஜெல் ஒரு இயற்கை மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. இதிலுள்ள அழற்சி எதிர்ப்பு பொருள் உங்கள் சருமத்தை மென்மையாக மற்றும் ஈரப்பதம் மிக்கதாக வைக்கிறது. மேலும் இது ஏஜ் ஸ்பாட்ஸ் மற்றும் சரும பிரச்சினைகளை சரி செய்கிறது.

பயன்படுத்தும் முறை

கற்றாழை ஜெல்லை எடுத்து அதன் ஜெல்லை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவ வேண்டும்
30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்
பிறகு நன்றாக நீரில் கழுவ வேண்டும்
ஒரு நாளைக்கு இரு முறை இதை செய்து வந்தால் ஏஜ் ஸ்பாட்ஸிலிருந்து விடுபடலாம்.
யோகார்ட்டில் உள்ள லாக்டிக் அமிலம் பிரவுன் நிற புள்ளிகள் மற்றும் இறந்த செல்களை நீக்குகிறது

பயன்படுத்தும் முறை

யோகார்ட்டை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவ வேண்டும்
நன்றாக காய வைத்து 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்
சாதாரண நீரில் கழுவவும்
படுப்பதற்கு முன் யோகார்ட்டை அப்ளே பண்ணவும்
தினமும் இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்
தக்காளியில் லைகோபீன் என்ற பொருள் உள்ளது. இந்த பொருள் சருமத்தில் உள்ள புள்ளிகளை நீக்குகிறது. இந்த ப்ளீச்சிங் பொருள் சருமத்திற்கு நல்ல நிறத்தையும், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

தக்காளியை வெட்டி துண்டுகளாக்கி கொள்ளவும்
பாதிப்படைந்த சருமத்தில் இதை தடவவும்
பிறகு தக்காளி சாறை சருமத்தில் நன்றாக தடவவும்
20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும்
பிறகு சாதாரண நீரில் கழுவவும்
ஒரு நாளைக்கு இரு முறை என்று இந்த முறையை செய்து வந்தால் ஏஜ் ஸ்பாட்ஸ் காணாமல் போகும்.
சில ஏஜ் ஸ்பாட்ஸ் வித்தியாசமான கடினமாக காணப்படும். விளக்கெண்ணெய் இந்த மாதிரியான ஏஜ் ஸ்பாட்ஸ்யை நீக்கி நல்ல சரும சருமத்தை கொடுக்கிறது.

பயன்படுத்தும் முறை

விளக்கெண்ணெய்யை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும்
நன்றாக சருமத்தில் மசாஜ் செய்து எண்ணெய் ஊடுருவி தோலினுள் செல்லுமாறு செய்யவும்
நல்ல மாற்றம் கிடைக்க இதையே காலை மற்றும் மாலை என்ற இரு வேளைகளில் செய்யவும்
நீங்கள் வறண்ட சருமத்தை பெற்று இருந்தால் இதனுடன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ளவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுற்று நோயாளிகள் மற்றும் சக்கரை நோயாளிகளுக்கு கைகொடுக்கும் பீன்ஸ்!
Next articleசில மாதங்களில் திருமணம்! யாழ். இளைஞன் இந்தியாவில் பரிதாப பலி!