மாயமான அம்மா பகவான்! 2 நாளில் 500 கோடி பறிமுதல் ! கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு!

0

விஷ்ணுவின் அவதாரம் என்று அறிவித்து கொண்ட 70 வயது சாமியாரும், அவரது மனைவி அம்மா பகவானும் மாயமாகிவிட்டனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திர மாநிலம் நெகமத்தில் 30 வருடங்களுக்கு மேலாக கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது.

விஜயகுமார்தான் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார். திடீரென ஒரு நாள் தன்னை ஒரு கடவுளாகவும் அறிவித்துகொண்டார். அதாவது தன்னை விஷ்ணுவின் அவதாரம் என்றும் இனிமேல் தன்னுடைய பெயர் கல்கி பகவான் என்றும் பகிரங்கமாக சொல்ல தொடங்கினார். இவர் கல்கி பகவான் ஆகிவிட்டதால், இவரது மனைவி பத்மாவதி “அம்மா பகவான்” ஆகிவிட்டார்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் வழங்கும் ஏகப்பட்ட நிதி, அதை வைத்து ரியல் எஸ்டேட் தொழில் பார்ப்பது.

வேலூரில் 1000 ஏக்கர் நிலம், ஆந்திராவில் பல்கலைக்கழகம், ஆப்பிரிக்காவில் நிலம் என்று அடுக்கடுக்காக சொத்துக்கள் குவிந்தன.

வரி ஏய்ப்பு புகாரும், பணப்பரிவர்த்தனைகளை மறைத்த புகார்களும் வெளிவர ஆரம்பித்தன.

அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள 40 கல்வி ஆசிரமங்களில் 2 நாள் ரெய்டு நடத்தி 500 கோடியை பறிமுதல் செய்தனர்.

இவ்வளவுக்கும் முழு முதற் காரணம் கிருஷ்ணாதான். இந்த ரெயிடு நடக்கும் சமயங்களில் கிருஷ்ணாவும் அவரது மனைவியும்தான் அதிகாரிகளின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்கள். ஒரு சில கேள்விகளுக்கு நிறுவன ஊழியர்கள் பதில் அளித்தார்கள்.

ஆனால், சம்பந்தப்பட்ட சாமியாரை ஆசிரமத்தில் காணோமாம். அவருக்கு உடம்பு சரியில்லை என்று தகவல் வந்ததோடு சரி.. அதற்கு பிறகு என்னானார் என்றே தெரியவில்லை.

சாமியார் மனைவி புஜ்ஜம்மாவையும் காணவில்லையாம். இதைவிட அதிர்ச்சி, இந்த சாமியார் தம்பதி 2 வருடங்களாகவே இங்கு இல்லையாம்.

நிறுவன பொறுப்புகளை மகன் கவனித்து வந்தாலும், இந்த தம்பதி இப்போ எங்கே இருக்கிறார்கள் என்பதுதான் பெரிய கேள்வியாக எழுந்து வருகிறது. விஷ்ணுவின் அவதாரமும், அம்மா பகவானும் எங்கே இருக்கிறார்களோ!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆசைக்கு தடையாக இருந்த தாய்… தனது பாணியில் பழிவாங்கிய குட்டி குரங்கு! திரும்ப திரும்ப அவதானிக்க வைக்கும் காட்சி !
Next articleரசிகருடன் நெருக்கமாக லொஸ்லியா இலங்கை விமான நிலையத்தில் லொஸ்லியா கூறியது என்ன?