மர்ம உறுப்பை துண்டித்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன்! அச்சத்தில் பொதுமக்கள்!

0

குடிபோதையில் சாலையில் கிடக்கும் நபர்களை குறிவைத்து, மர்மஉறுப்பை துண்டித்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனின் கைவரிசையால் வட சென்னை மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சென்னை மாதவரம் அடுத்த ரெட்டேரி பகுதியில் கடந்த மாதம் 26-ம் தேதி மேம்பாலத்திற்கு அடியில் கொளத்தூரை சேர்ந்த அஸ்லம்பாஷா போதை மயக்கத்தில் படுத்துக்கிடந்துள்ளார்.

மறுநாள் காலையில், அவரது உடலில் அதிகளவு காயங்கள் இருந்ததால், அக்கம்பக்கத்தினர் அஸ்லாம் பாஷாவை ஸ்டான்லி மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ந்தனர்.

மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட அஸ்லாம்பாஷா

52 வயதான அஸ்லாம்பாஷாவின் உடலில் காயங்கள் இருந்துள்ளது, அத்தோடு மர்ம உறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், 5 நாட்கள் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி, அஸ்லாம் பாஷா திடீரென ஜூன் 1-ம் தேதி உயிரிழந்தார்.

அஸ்லாம் பாஷா கடுமையான போதையில் இருந்ததால், மயக்கமான நிலையிலேயே இருந்துள்ளார். அதனால், அவருடைய வாக்குமூலத்தை போலீசாரால் பதிவு செய்யமுடியவில்லை. இதனால் அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போனது.

அஸ்லாம்பாஷா உயிரிழந்த 2 நாட்களில், மீண்டும் அதேபோன்ற ஒரு சம்பவம், அதேபகுதியில் நடந்துதான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு பழைய இரும்பு கடையில் கூடங்குளத்தைச்சேர்ந்த நாராயணன் என்பவர் பணியில் சேர்ந்துள்ளார்.

ஜூன் 3-ம் தேதி இரவு மதுபோதை உச்சத்துக்கு சென்றதால், ரெட்டேரி மேம்பாலம் அருகில் படுத்துகொண்டார். அன்று இரவு அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் அவரை கடுமையாக தாக்கியதால் நாராயணன் மயங்கியுள்ளார்.

மயங்கிய நாராயணனை அக்கம்பக்கத்தினர் போலீசார் மூலம் ஸ்டான்லி மருத்துவமனையில் நாராயணனை சேர்த்தனர். ஆரம்பத்தில் மதுபோதை மற்றும் காயம் ஏற்பட்டதன் காரணமாக மயக்க நிலையில் இருந்ததால் நாராயணனை தாக்கியது யாரென தெரியவில்லை.

நாராயணனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தால், 2 நாட்களுக்கு பிறகு மயக்கம் தெளிந்தது. நாராயணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில்தான் சைக்கோ கொலையாளி குறித்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

ஒரின சேர்க்கைக்கு மறுத்ததால் மர்ம நபர் தாக்குதல்

மர்ம நபர் ஒருவர் தன்னை ஒரின சேர்க்கைக்கு அழைத்ததாகவும், தான் மறுத்ததால் தன்னை தாக்கிவிட்டு, தனது மர்ம உறுப்பை துண்டித்ததாகவும் போலீசாரிடம் நாராயணன் வாக்குமூலம் அளித்தார்.

உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நாராயணனின் வாக்குமூலத்தை அடுத்து, சுதாரித்துக்கொண்ட போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணையை வேகப்படுத்தினர்.

தனிப்படை அமைத்த போலீசார்

துணை காவல் ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்ட தரவுகளைக்கொண்டு, சைக்கோ கொலையாளியை வலைவீசி தேடி வருகின்றனர். மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துவிடக்கூடாது என்பதால், ரெட்டேரி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கூடம் அமைந்துள்ள பகுதிகளில் போலீசார் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

முதல் சம்பவத்தை போலீசார் முறையாக விசாரிக்காததே 2-வது சம்பவம் நடக்க காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இரவு நேரங்களில் தெருவில் நடக்க அச்சமாக இருப்பதாக ரெட்டேரி பகுதிவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.

சைக்கோ கொலையாளி யார்?

சுமார் 40 வயதுடைய உருவத்தை ஒத்த நபர் ஒருவர்தான் சைக்கோ கொலையாளியாக இருக்கவேண்டும் என்று போலீசார் கணித்துள்ளனர். அதேபோல், சைக்கோ நபர், ஓரினச்சேர்க்கையில் அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கவேண்டும் என்று போலீசார் கருதுகின்றனர்.

அச்சத்தில் பகுதி மக்கள்

இது போன்ற சைக்கோதனமானவர்களை கண்டுபிடிப்பது எப்படி? அவர்களுக்கு எதுமாதிரியான சிகிச்சை அளிக்கப்படும்? அடுத்த சம்பவம் நடப்பதற்குள், சைக்கோ பேர்வழியை சென்னை போலீசார் கைது செய்வார்களா? என பலவிதமான கேள்விகளை அந்த பகுதி மக்கள் எழுப்புகின்ரனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த புகைப்படத்தில் இருக்கும் குட்டி குழந்தை யார் தெரியுமா! பிரபல நடிகை தான்!
Next articleகாதல் கணவர் தற்கொலைக்கு பின் மைனாவிற்கு இரண்டாவது திருமணமா! மாப்பிள்ளை இவர்தான்!