மன்னார் மடுப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள விளாத்திக்குளம் வலையன்கட்டு பகுதி மக்கள் தற்போது தொழில்வாய்ப்பின்மை காரணமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தின் மடுப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள விளாத்திக்குளம் வலையன்கட்டு ஆகிய கிராமங்களில் நிலவும் கடுமையான வறட்சி மற்றும் தொழில் வாய்ப்பின்மை போன்ற காரணங்களால் மேற்படி கிராமங்களில் வாழும் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, தொழில் வாய்ப்பின்மை மற்றும் வறட்சி காரணமாக ஒரு நேர உணவைக்கூட உட்கொள்வதே பெரும் கஷ்டம் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: