மனைவி சலித்து போனதால் மகளை திருமணம் செய்ய துடித்த பொலிஸ் தந்தை!

0

வாலாஜாப்பேட்டையில் மகள் உறவு உள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்கும்படி இரண்டாவது தந்தை கோரிய நிலையில் தாய் மர்மமான முறையில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்து மேல்புதுப்பேட்டையை சேர்ந்த கல்பனாவிற்கும், காவேரிப்பாக்கம் பெரியகிராமத்தை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் திருமணமாகி 18 வயதில் மஞ்சு மற்றும் 10 வயதில் சுப்புலட்சுமி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் கல்பனாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த காவலர் குமரேசன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதை அறிந்த ரமேஷ், கல்பனாவை விட்டு சென்றுவிட்டார். இதையடுத்து குமரேசனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட கல்பனா தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்தார்.

கல்பனாவும் மஞ்சும் தோல் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர். குமரேசன் சென்னையில் பொலிஸாக பணியாற்றி வருவதால் வாரத்தில் ஒரு முறை வாலாஜாப்பேட்டைக்கு வந்து கல்பனாவை சந்தித்து விட்டு செல்வது வழக்கம்.

குமரேசனுக்கு கல்பனாவை விட வயதில் சிறியவரான மஞ்சு மீது ஒரு கண் இருந்தது. அவரை எப்படியாயினும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தார். இந்த ஆசையை கல்பனாவிடம் சொன்னபோது மகள் உறவு கொண்ட பெண்ணை எப்படி திருமணம் செய்து வைப்பது என கேட்டு மறுப்பு தெரிவித்தார்.

இதனால் எப்போது ஊருக்கு வந்தாலும் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு குமரேசன், கல்பனாவை தாக்குவது வாடிக்கையாகி இருந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த கல்பனா வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். சம்பவத்தன்று மஞ்சு வேலைக்கு சென்று விட்டு திரும்பிய போது வீட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கல்பனா தூக்கில் தொங்கிய நிலையில் மயக்கத்தில் இருந்தார்.

உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கல்பனா கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார். தனது தாய் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் தற்கொலை செய்திருக்கமாட்டார் என்றும் மஞ்சு வாலாஜாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் குமரேசன் பொலிஸ் என்பதால் அவருக்கு எதிரான அந்த புகாரை யாரும் ஏற்கவில்லை. தனது புகாரை பொலிசார் எடுக்க வேண்டும் என மஞ்சு கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous articleதூக்கில் தொங்கிய பெற்றோர்! பூட்டிய வீட்டினுள் ரத்த வெள்ளத்தில் கிடந்த குழந்தை! அதிர்ச்சி சம்பவம்!
Next articleதன் அழகிய மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர்! அடுத்து நடந்த விபரீதம்?