மனைவியை மாட்டிவிடுவதற்காக குடிபோதையில் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு போன் செய்த மர்ம நபர், தன்னுடைய மனைவி முன்னி என்பவர் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு நாளை வெடிகுண்டு வைக்க உள்ளதாக கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதை தொடர்ந்து சென்ரல் ரயில் நிலையத்திற்கு பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் தேனாம்பேட்டை, வரதராஜபுரத்தை சேர்ந்த சரவணன்(37) என்பவர் போதையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
போதையில் இருந்த சரவணனிடம், அவரது மனைவி முன்னி சண்டையிட்டுள்ளார், அதனால் மனைவியை பொலிசில் சிக்க வைக்கவே, வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து சரவணனை கைது செய்த தேனாம்பேட்டை பொலிசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.