போர்வெல் மூலம் மொத்தம் ஆறு துளைகள் எட்டியது 60 முதல் 70 அடி ஆழம்! தொடரும் சுர்ஜித் மீட்பு பணி

0

ரிக் இயந்திரம் மூலம் துளையிடும் பணிகளில் முன்னேற்றம் ஏற்படாததால் தற்போது போர்வெல் கருவி மூலம் துழையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

நெடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தில், ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சுர்ஜித்தை மீட்க பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றது.

அதில், முன்தாக பல முறைகள் கையளப்பட்டாலும் அனைத்து தோல்வியை சந்தித்தது. குறிப்பாக குழந்தை விழுந்த போர்வெலில் இருந்து இரண்டு மீற்றர் தூரத்தில் துளையிடும் பணிகள் செய்யப்பட்டது. ஆனால், அதில் பயன்படுத்தப்பட்ட ரிக் இயந்திரம் அடிக்கடி பழுது ஆனதாலும், தொடர்ந்து துளையிட முடியாமலும், வேகமாக துளையிட முடியாமலும் இருந்தது.

இந்நிலையில், தற்போது போர் போடும் இயந்திரத்தை கொண்டு ஏற்கனவே பாதியளவில் போடப்பட்ட துளையில் ஆறு துளைகளாக பிரித்து அதை அகலப்படுத்த தற்போது பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதில் மூன்று துளைகள் தற்போது 65அடி ஆழத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், 36மணிநேரம் கடந்து துளையிடும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும், குழந்தை துளையில் சிக்கி தற்போது,70 மணி நேரம் கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்களுக்கு அதற்கான‌ ஆர்வம் குறைஞ்சுபோக காரணம் இதுதானாம் தெரிஞ்சிக்கோங்க!
Next article3 நாட்களில் உலகம் முழுவதும் பிகில் இத்தனை கோடி வசூலா! அதிர வைத்த பிரம்மாண்ட சாதனை !