முதுகு வலியை நிரந்தரமாக குணமாக பூண்டு பால் குடியுங்கள்! செய்முறை விளக்கம்!

0

முதுகு வலியால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இத குடிங்க! பஞ்சா பறந்து போகும் வலி!

நம்மில் பலருக்கும் கடுமையான இடுப்பு அல்லது முதுகு வலி இருக்கும். இப்பிரச்சனை உள்ளவர்களால் எந்த ஒரு கனமான பொருளையும் தூக்க முடியாது.

மேலும் அவர்களால் நீண்ட நேரம் நிற்கவோ, உட்காரவோ கூட முடியாது. சிலருக்கு முதுகு, இடுப்பு, கால் ஆகிய மூன்று பகுதிகளிலும் ஒரே நேரத்தில் கடுமையான வலி இருக்கும். இந்த வகையான முதுகு வலி இடுப்புமூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள பிரச்சனையால் வருவதாகும்.

இப்படி வரும் முதுகு அல்லது இடுப்பு வலியை நிரந்தரமாக விரட்ட இந்த இயற்கை பானத்தைக் குடித்தால் போதும்.பஞ்சாய் பறந்துவிடும் வலி. இந்த அற்புதமான இயற்க்கை பானத்தை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

பால் – 200 மிலி
பூண்டு – 4 பற்கள்
தயாரிக்கும் முறை:

முதலில் பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடேற்ற வேண்டும். பின் அதில் பூண்டு பற்களைத் தட்டிப் போட்டு, மிதமான தீயில் சில நிமிடங்கள் வேக வைத்து இறக்க வேண்டும்.

குடிக்கும் முறை:

இந்த பாலை தினமும் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால், இடுப்பு அல்லது முதுகு வலி சற்று குறைந்திருப்பதை உணர்வீர்கள். வலி முழுமையாக போய்விட்டால், இந்த பாலைக் குடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம்.

பூண்டின் நன்மைகள்:

இந்த பானம் இடுப்புமூட்டுக்குரிய நரம்புகளில் உள்ள வலி மற்றும் காயங்களைக் கட்டுப்படுத்தும். மேலும் பூண்டில் நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள் உள்ளது. விருப்பமுள்ளவர்கள், இந்த பானத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து குடிக்கலாம்.

குறிப்பு:

இந்த பானத்தை குடிப்பதோடு, இடுப்புமூட்டுக்குரிய நரம்பு வலியைக் குறைக்க உதவும் உடற்பயிற்சியையும் செய்து வந்தால், இன்னும் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article5 நாட்களில் கண் கருவளையம் நீங்க எளிமையான வீட்டு மருத்துவம்!
Next articleஅசிங்கமான மருக்கள் அடியோடு நீங்க 5 வீட்டு வைத்தியங்கள்!