இந்தியாவின் தமிழ்நாட்டில் தகாத உறவின் காரணமாக இரண்டு குழந்தைகளை விஷம் வைத்து கொலை செய்துவிட்டு காதலனுடன், தாய் ஓட்டம் பிடித்துள்ள கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
குன்றத்தூரை அடுத்த அடுத்த மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் விஜயன் (30) – அபிராமி (25) தம்பதியினர். இவர்களுக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னிகா என்ற மகளும் உள்ளனர்.
தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வரும் விஜயன், மத கடைசில் என்பதால் நேற்று வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இன்று காலை வீடு திரும்பிய அவர், வீடு வெளிப்பக்கம் தாழ்பாள் போடப்பட்டிருப்பதை பார்த்து சந்தேகித்துள்ளார்.
பின்னர் வீட்டின் கதவை திறந்து கொண்டே உள்ளே பார்த்த போது, தன்னுடைய இரண்டு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் வீட்டில் மனைவி மாயமாகியிருப்பதை பார்த்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், இரு குழந்தைகளின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், விஜயனிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அபிராமிக்கு வேறு ஒரு நபருடன் தகாத உறவு இருந்து வந்ததால், கடந்த சில நாட்களாகவே இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் கள்ளக்காதலனுடன் தப்பி சென்ற அபிராமியை பிடிக்கும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.