எச்சரிக்கை!இந்த மீன் சாப்பிட்டால் புற்று நோய் வரும் அபாயம் உள்ளது !

0

இது மொய்மீன், பூ விரால், தேளிவிரால் என ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் உண்மையில் இது ஆஃப்ரிக்கன் கெளுத்தி என கூறப்படுகிறது. இது ஆசிய நாடுகளுக்குள் பரவி அஸ்ஸாம் பிரம்மபுத்திரா ஆற்றின் வழியாக இந்தியாவிற்கு வந்து சேர்ந்ததாக இதன் வரலாறு தெரிவிக்கப்படுகிறது.

கடற்கரையிலிருந்து தொலைவில் இருக்கும்,கடல் மீன்கள் கிடைப்பது அரிதாக உள்ள மாவட்டங்களில் இது குட்டைகள் அமைத்து செயற்கையாக வளர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த மீன் அசைவம் மட்டுமே சாப்பிட்டு ராட்சஷதனமாக வளரக்கூடியது.

இந்த மீனின் வருகையால்தான் நம் உள் நாட்டு நன்னீர் மீன்களான அயிரை,உளுவை,இரால் போன்றவை அழிந்து வருவதாக மீன்வளத்துறையினர் குறிப்பிடுகின்றனர். இது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை

இந்த மீனுக்கு துரித வளர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு கோழிக்கடையில் இருந்து வீசி எறியப்படும் தேவையற்ற குடல் போன்ற கழிவுகள் இவை வளரும் குட்டையில் எறியப்படுகின்றன

இந்த மீன் வளர்ப்பு பல வெளி நாடுகளில் மட்டுமல்ல, இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மீன் சாப்பிடுவோருக்கு பல விதமான தோல் நோய்கள், ஆண்மைக்குறைவு, புற்று நோய் போன்ற விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து பல பத்திரிக்கைகள் பல்வேறு செய்திகள் வெளியிட்டிருக்கின்றன என்றாலும் இன்றுவரையும் இந்த மீன் திருட்டுத்தனமாக வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.

நம்மில் பலருக்கும் இது குறித்து விழிப்புணர்வு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.. இது நம் மரபுகளை பாதிக்கும் என்பதால், இதை அனைவரும் அறிந்திருப்பது அவசியமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநேரத்துக்கு பசிக்கலயா அப்போ இதுவும் காரணமா இருக்கலாம்!
Next articleஜோதிடப்படி உங்கள் எண்ணுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையின் எண் என்ன தெரிந்துக்கொள்ளலாம்!