புத்தாண்டு பலன் – 2019 விருச்சிகம்!

0

விருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை
அன்புள்ள விருச்சிக ராசி நேயர்களே குறும்பு தனமும், விஷமத்தனமும் அதிகம் கொண்டவராக இருந்தாலும், பெரியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ளும் பண்பு கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும் ஏழரை சனியில் பாதசனி தொடருவதும், குருபகவான் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்வதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் எந்த ஒரு செயல் செய்வதென்றாலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைப்பதில் தடைகள் உண்டாகும்.

இதனால் சுபகாரியங்கள் நடைபெறுவதில் தாமதநிலை ஏற்படும். 07.03.2019-ல் ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தின் மூலம் கேது 2-ஆம் வீட்டிலும், ராகு 8-ஆம் வீட்டிலும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் நல்ல அமைப்பு என்று கூற முடியாது என்பதால் கணவன்- மனைவி இடையே தேவையற்ற வாக்கு வாதங்கள் ஏற்பட்டு நிம்மதி குறைவு உண்டாகும். முடிந்தவரை பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பொன், பொருள் சேர்க்கைகள் உண்டாகும் என்றாலும் தேவையற்ற ஆடம்பர செலவுகளை தவிர்த்தால் மட்டுமே கடன்கள் ஏற்படாமல் சமாளிக்க முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே உங்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். கொடுத்த கடன்களை திரும்ப பெற முடியாமல் போகும்.

பண விஷயத்தில் வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் அனைத்தும் போட்டிகளால் கை நழுவிப்போகும். கூட்டாளிகளும் தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவற்றால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும். உயரதிகாரிகளின் கெடுபிடிகளால் செய்யும் பணியில் முழுமையான ஈடுபாடு ஏற்படாது. தேவையற்ற பயணங்களால் அலைச்சலும் வீண் செலவுகளும் உண்டாகும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகளால் மனநிம்மதி குறைவு உண்டாகும். இந்த வருட இறுதியில் ஏற்படவுள்ள குருமாற்றத்தின் மூலம் 05.11.2019-ல் குரு 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் அதன் பிறகே உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்
உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி இருக்கும். மனைவி பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்கள் ஏற்படுத்தும் தேவையற்ற பிரச்சினைகளால் மன நிம்மதி குறையும். எதிரிகளின் பலம் கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் உண்டாகும். குல தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வதால் மனநிம்மதி கிடைக்கும்.

குடும்பம் பொருளாதாரநிலை
குடும்பத்தில் நிம்மதி குறைய கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். அடிக்கடி கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது உத்தமம். உற்றார் உறவினர்களிடமும் கருத்து வேறுபாடுகளும், பிரச்சினைகளும் ஏற்படும். புத்திர வழியில் வீண் செலவுகள் உண்டாகும். பொருளாதார நிலையில் தடைகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். எதிலும் சிந்தித்து நிதானமாக செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும்.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் கெடுபிடிகளால் வேலைபளு அதிகரிக்கும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் உதையும் சமாளிக்க முடியும். நியாயமாக கிடைக்க வேண்டிய பதவிகளையும் பிறர் தட்டி சென்றாலும் மதிப்பு குறையாது. சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டி இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை கிடைப்பதில் தாமதநிலை நீடிக்கும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு வீண் அலைச்சலும், தேவையற்ற நெருக்கடிகளும் மறைமுக எதிர்ப்புகளும் ஏற்பட்டாலும் மந்தநிலையோ, பொருள் தேக்கமோ ஏற்படாது. பிறரை நம்பி புதிய முயற்சிகளில் ஈடுபடுவதோ பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதோ கூடாது. தெவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். பொருளாதார நிலை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும்.

கமிஷன்- ஏஜென்ஸி
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் சிந்தித்து செயல் பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். கொடுக்கல்- வாங்கலில் தேவையற்ற பிரச்சினைகள் உண்டாகும். கொடுத்த கடன்களை வசூலிக்க சிரமப்பட வேண்டி இருக்கும். பணவிஷயத்தில் பிறருக்கு முன் ஜாமீன், வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது உத்தமம்.

அரசியல்
அரசியலில் பெயர் புகழ் பாதிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவைப் பெற முடியும். வெளியூர், வெளி நாட்டு பயணங்களால் சுமாரான அனுகூலங்களை மட்டுமே பெற முடியும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் மறைமுக வருவாய்கள் தடைப்படும்.

விவசாயிகள்
விவசாயிகளுக்கு வாய்க்கால் வரப்பு பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் பங்காளிகளை அனுசரித்து செல்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் சற்று அதிகரிக்கும். முடிந்த வரை முன்கோபத்தைக் குறைப்பது நல்லது. எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வாழ்வில் ஒரளவுக்கு முன்னேற்றத்தையும், விளைச்சலையும் பெற முடியும். சந்தையில் விளைபொருட்களை சுமாரான விலைக்கே விற்க முடியும்.

கலைஞர்கள்
தொழில் ரீதியாக நிறைய போட்டிகள் உண்டாகும். அளவுக்கு அதிகமாக உழைப்பினை மேற்கொண்டாலும் வர வேண்டிய சம்பள தொகைகள் ஓரளவுக்கே கிடைக்கும். இருக்கும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்தினால் மட்டுமே ஓரளவுக்கு முன்னேற்றத்தை அடைய முடியும். ரசிகர்களின் ஆதரவுகள் மன மகிழ்ச்சியினை தரும்.

பெண்கள்
உடல் நிலையில் அடிக்கடி பாதிப்பு உண்டாகும். மனநிலையில் வீண் குழப்பம் சஞ்சலம் நிம்மதியற்ற நிலை ஏற்படும். கணவன்- மனைவி இடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். சுபகாரிய முயற்சிகளில் தடைக்குப் பின் அனுகூலபலன் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணிபுரிபவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உயர்வுகள் கிட்டும்.

மாணவ- மாணவியர்
ஆசிரியர்கள் அறிவுரைகளை கேட்டு நடந்து கொள்வது நல்லது. கல்வியில் கவனம் செலுத்த முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். மனதை அலைபாய விடாமல் கவனத்துடன் படிப்பது தேவையற்ற நண்பர்கள் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். வண்டி வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைப்பது நல்லது.

ஜனவரி.
ஜென்ம ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்பதாலும், மாதபிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் செயல்பட்டால் மருத்துவ செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கணவன்- மனைவி பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலைபளு குறைவாகவே இருக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் கல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். குரு பகவானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 18-01-2019 இரவு 11.33 மணி முதல் 21-01-2019 அதிகாலை 00.05 மணி வரை.

பிப்ரவரி
ஜென்ம ராசியில் குரு, 2-ல் சனி சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும், மாத முற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதால் போட்டிகளை சமாளித்து முன்னேறி விடுவீர்கள். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல், டென்ஷனை குறைத்து கொள்ள முடியும். குடும்பத்தில் தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்றவை ஏற்படும். முடிந்த வரை நேரத்திற்கு உணவு உண்பது, ஆரோக்கிய விஷயத்தில் கவனமுடனிருப்பது, மற்றவர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் சற்று ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்ந்தெடுத்து பழகுவது உத்தமம். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 15-02-2019 காலை 09.32 மணி முதல் 17-02-2019 பகல் 11.24 மணி வரை.

மார்ச்
இம்மாதம் 5-ல் புதன், ராசியாதிபதி செவ்வாய் 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மேம்படும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதி குறையாது. 7-ஆம் தேதி முதல் 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிக்க உள்ளதால் உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்திலிருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெறுவதுடன் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்ணைப் பெறுவார்கள். சனீஸ்வர வழிபாடு நன்மையை அளிக்கும்.
சந்திராஷ்டமம் – 14-03-2019 மாலை 04.58 மணி முதல் 16-03-2019 இரவு 08.38 மணி வரை.

ஏப்ரல்
இம்மாதம் மாத பிற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும், 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். திருமண சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும் என்றாலும் பேச்சில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் கடந்த காலங்களிலிருந்த பிரச்சினைகள் விலகும். கணவன்- மனைவியிடையே வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். பணிபுரிபவர்களுக்கு தகுதிக்கேற்ற உயர்வுகள் கிடைக்கும். திறமைகள் பாராட்டப்படும். தொழிலாளர்களும் சாதகமாகச் செயல்படுவதால் அபிவிருத்தியைப் பெருக்க முடியும். மாணவர்கள் அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் முன்னேற்றம் அடைவார்கள். சிவபெருமானை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 10-04-2019 இரவு 10.33 மணி முதல் 13-04-2019 அதிகாலை 03.15 மணி வரை.

மே
இம்மாத முற்பாதியில் சூரியன் 6-ல் சஞ்சரிப்பதாலும், 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பதும் நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது மூலம் அலைச்சல்களை குறைத்து கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் உண்டானாலும் உடனே சரியாகிவிடும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் வழியிலும் அனுகூலங்கள் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வரவேண்டிய வாய்ப்புகள் தடைப்படாது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிவர்களின் ஆதரவுகளால் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க முடியும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 08-05-2019 அதிகாலை 04.15 மணி முதல் 10-05-2019 காலை 08.35 மணி வரை.

ஜுன்
ஜென்ம ராசிக்கு 2-ல் சனி, கேது 8-ல் செவ்வாய், ராகு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சற்று தாமத நிலை உண்டாகும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சை குறைப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் வீண் பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது முலம் வீண் பிரச்சனைகள் குறையும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். அம்மன் வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 04-06-2019 பகல் 11.40 மணி முதல் 06-06-2019 பகல் 02.50 மணி வரை.

ஜுலை
ஜென்ம ராசிக்கு 2-ல் சனி, கேது 8-ல் சூரியன், ராகு சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டே வெற்றி பெற வேண்டியிருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களால் சில பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் கவனமுடன் செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் ஓரளவுக்கு கிடைப்பதால் வேலைபளு சற்றே குறையும். ராகு கேதுவுக்கு பரிகாரம் செய்வது உத்தமம்-.
சந்திராஷ்டமம் – 01-07-2019 இரவு 08.55 மணி முதல் 03-07-2019 இரவு 11.10 மணி வரை மற்றும் 29-07-2019 காலை 06.55 மணி முதல் 31-07-2019 காலை 09.15 மணி வரை.

ஆகஸ்ட்
ராசிக்கு 2-ல் சனி, கேது 8-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதி குறைவு உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருக்கும் என்றாலும் லாபம் குறையாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்ப்பது உத்தமம். சர்ப சாந்தி செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 25-08-2019 மாலை 04.13 மணி முதல் 27-08-2019 இரவு 07.40 மணி வரை.

செப்டம்பர்
இம்மாதம் ராசிக்கு 10, 11-ல் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிட்டும். குடும்பத் தேவைகள் தடையின்றி பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைய கூடிய சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமத நிலை ஏற்பட்டாலும் பணியில் நிம்மதியான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களைப் பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல லாபம் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விட முடியும். தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 21-09-2019 இரவு 11.40 மணி முதல் 24-09-2019 அதிகாலை 04.50 மணி வரை.

அக்டோபர்
லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதோடு எதிர்பாராத தனவரவுகளாலும் பொருளாதார நிலை உயர்வடையும். உங்களுக்குள்ள வம்பு, வழக்குகளில் சாதகப் பலன் கிட்டும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளை சுறுசுறுப்பாக செய்ய முடியும். கொடுக்கல்- வாங்கலில் சுமாரான நிலையிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிட்டும். மாணவர்கள் கல்வியில் உயர்வடைவார்கள். ராகுவுக்கு பரிகாரம் செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 19-10-2019 அதிகாலை 05.25 மணி முதல் 21-10-2019 பகல் 11.40 மணி வரை.

நவம்பர்
ஜென்ம ராசியில் சுக்கிரன், புதன் 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 5-ஆம் தேதி முதல் குரு 2-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைபட்ட திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பொன், பொருள் சேரும். உற்றார் உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். ஆன்மீக தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் எதிர்பார்க்கும் லாபங்களை பெற முடியும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகளை பெறுவார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குவார்கள். சிவபெருமானை வழிபடுவது நல்லது.
சந்திராஷ்டமம் – 15-11-2019 பகல் 11.03 மணி முதல் 17-11-2019 மாலை 05.05 மணி வரை.

டிசம்பர்
ஜென்ம ராசிக்கு 2-ல் குரு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் ஓற்றுமை குறையாது. உறவினர்களிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் ஏற்படும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை எதிர்கொள்ள நேர்ந்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். கூட்டாளிகள் அனுகூலமாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல்கள் குறையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 12-12-2019 மாலை 06.25 மணி முதல் 14-12-2019 இரவு 11.15 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் -1,2,3,9
நிறம் – ஆழ்சிவப்பு, மஞ்சள்
கிழமை – செவ்வாய், வியாழன்
திசை – தெற்கு
கல் – பவளம்
தெய்வம்- முருகன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபுத்தாண்டு பலன் – 2019 மீனம்!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 31.12.2018 திங்கட்கிழமை!