புத்தாண்டு பலன் – 2019 சிம்மம்!

0

சிம்மம் மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்
அன்புள்ள சிம்ம ராசி நேயர்களே, அஞ்சா நெஞ்சமும் தாராள மனப்பான்மையும், பெருந்தன்மையும் கொண்ட உங்களுக்கு என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்கள் ஜென்ம ராசிக்கு 4-ல் குரு, 5-ல் சனி சஞ்சரிப்பது அவ்வளவு சாதமான அமைப்பு என்று கூற முடியாது. வரும் 07.03.2019-ல் ஏற்பட இருக்கும் சர்பகிரக மாற்றத்தின் மூலம் ராகு பகவான் 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய உள்ளதால் எதையும் ஓரளவுக்கு சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் முடிந்த வரை ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது, தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்களுக்குப் பிறகே அனுகூலப்பலன் உண்டாகும்.

புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்களை சந்திப்பீர்கள். வீடு, மனை வாங்கும் முயற்சிகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கலில் நெருங்கியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் மற்றவர்களுக்கு பண உதவி செய்வது வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் கைநழுவிப் போவதால் எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத சூழ்நிலைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் தேவையற்ற பிரச்சினைகளை சந்தித்தாலும் உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகளால் எதையும் சமாளித்து விட முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். இந்த வருட இறுதியில் 05.11.2019-ல் ஏற்படவிருக்கும் குரு பெயர்ச்சியின் மூலம் குரு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டிற்கு மாறுதலாக இருப்பதால் வாழ்வில் பல்வேறு முன்னேற்றங்கள் உண்டாகும்.

உடல் ஆரோக்கியம்
உங்கள் ஆரோக்கியம் அடிக்கடி பாதிப்படையும். அஜீரண கோளாறு, தூக்கமின்மை, மன அமைதி குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகளும், வீண் விரயங்களும் உண்டாகும். மனைவிக்கு வயிறு கோளாறு, மாதவிடாய் பிரச்சினைகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் உடல் அலைச்சலை குறைக்க முடியும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்ப்பது மன
உளைச்சலை குறைக்கும்.

குடும்பம் பொருளாதாரநிலை
குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் விலகும். உறவினர்களின் வருகை அதிகமாகி வீண் செலவுகள் உண்டாகும். பொருளாதார நிலையில் சங்கடங்கள் நிலவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திருமண சுபகாரிய பேச்சு வார்த்தையில் தடைக்கு பின் அனுகூலபலன் உண்டாகும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டி இருக்கும். புத்திரர்களும் உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட மாட்டார்கள்.

உத்தியோகம்
உத்தியோகஸ்தர்களுக்கு தேவையற்ற அவப்பெயர்களால் பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை தாமதப்படும். தேவையற்ற இடமாற்றத்தால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும் என்றாலும் அதனால் அனுகூலமும் இருக்கும். அது மட்டுமின்றி பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க நேரிடும். உயர்அதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.

தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்கள் தேவையற்ற இடையூறுகளையும், சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். புதிய முயற்சிகளில் வீண் விரயம் உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். நவீன கருவிகளும் பழுதடைந்து வீண் செலவுகளை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் கடின உழைப்பிற்கு பின்பு அனுகூலப்பலனை பெற முடியும். நெருக்கடி நிலைகளை சமாளிக்க கடன் வாங்கினாலும், அதை திருப்தி செலுத்த கூடிய அளவிற்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

கமிஷன்- ஏஜென்ஸி
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்றவற்றில் சிந்தித்து செயல் பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும். எதிர்பார்த்த லாபம் தடைகளுக்குப் பின் கிட்டும். கொடுக்கல்- வாங்கலில் மற்றவர்களை நம்பி வாக்குறுதி, முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்ப்பதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும். வம்பு வழக்குகளில் இழுபறியான நிலை நீடிக்கும். பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அரசியல்
அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றினால் மட்டுமே மக்களின் ஆதரவை பெற முடியும் மேடை பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடனிருப்பவர்களும் தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். அமைச்சர்களின் ஆதரவு குறையும். பொருளாதார நிலையில் மறைமுக வருவாய்கள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதத்திற்கு பின்பு அனுகூலம் உண்டாகும்.

விவசாயிகள்
விவசாயிகள் சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும் மகசூல் ஒரளவுக்கு திருப்தியளிப்பதாக அமையும். விளைபொருளுக்கு ஏற்ற விலையை சந்தையில் பெற முடியாமல் போகும் என்றாலும் நஷ்டம் ஏற்படாது. வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் உறவினர்களிடையே சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். வங்கிக் கடன்களை குறித்த நேரத்தில் செலுத்த முடியாமல் போகும். கால்நடைகளால் ஒரளவுக்கு லாபத்தினை அடைவீர்கள்.

கலைஞர்கள்
புதிய வாய்ப்புகள் கை நழுவி போகும். இருக்கும் வாய்ப்புகளை தக்க வைத்து கொள்வது நல்லது. உடல் நிலை பாதிப்படையும். எதிர்பாராத உதவிகளால் கொடுத்த வாக்கு உறுதிகளை காப்பாற்ற முடியும். பொருளாதார நிலையில் சங்கடங்கள் உண்டாகும். வரவேண்டிய பாக்கி தொகைகளில் இழுபறியான நிலை உண்டாகும்.

பெண்கள்
புகுந்த வீட்டில் நிம்மதியற்ற நிலை ஏற்பட்டாலும் பிறந்த வீட்டின் ஆதரவு மகழ்ச்சி அளிக்கும். எடுக்கும் காரியங்களில் தடைக்கு பின்பு நற்பலன் ஏற்படும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து செல்வது நல்லது. புத்திர வழியில் வீண் செலவுகள் மனசஞ்சலங்கள் உண்டாகும். வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்பு, மாதவிடாய் பிரச்சினை போன்றவற்றால் மருத்துவ சற்று செலவுகளை சந்திக்க நேரிடும். பண வரவு ஏற்ற இறக்கமாக இருக்குமு.

மாணவ- மாணவியர்
மாணவர்கள் எவ்வளவு முயன்று படித்தாலும் அதை ஞாபகம் வைத்து கொள்ள முடியாத நிலை உண்டாகும். மதிப்பெண்கள் குறைய கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு சற்றே நிம்மதி அளிக்கும். தேவையற்ற நண்பர்களின் சகவாசங்களை தவிர்ப்பது எதிலும் கவனமாக இருப்பது நல்லது.

ஜனவரி
சுகஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், ராசியாதிபதி சூரியன் மாதபிற்பாதியில் 6-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதும் ஓரளவுக்கு நற்பலன்களை ஏற்படுத்தும் என்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட்டாவது அனுகூலங்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். குரு 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலப்பலனை அடைவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபம் பெருகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 12-01-2019 அதிகாலை 02.03 மணி முதல் 14-01-2019 பகல் 12.53 மணி வரை.

பிப்ரவரி
பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் 6-ல் கேது சஞ்சரிப்பதும், ராசியாதிபதி சூரியன் மாதமுற்பாதியில் 6-ல் சஞ்சாரம் செய்வதும் ஏற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் நெருங்கியவர்களால் நற்பலன்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பண வரவுகள் சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கணவன்- மனைவி அனுசரித்து செல்வது, உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவதில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறப்பு.
சந்திராஷ்டமம் – 08-02-2019 காலை 08.18 மணி முதல் 10-02-2019 இரவு 07.37 மணி வரை.

மார்ச்
உங்கள் ராசிக்கு 4-ல் குரு 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் வீண் விரயங்கள், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். 7-ஆம் தேதி ஏற்படவுள்ள சர்பகிரக மாற்றத்தால் ராகு 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப்பலன்களை பெற முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு பிரச்சனைகள், வாக்குவாதங்கள் போன்றவை ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் சற்று தாமத நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி எந்த வாக்குறுதிகளும் கொடுக்காமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மாணவர்கள் முழு முயற்சியுடன் படித்தால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ பெருமானை வணங்குதல் உத்தமம்.
சந்திராஷ்டமம் – 07-03-2019 பகல் 02.15 மணி முதல் 10-03-2019 அதிகாலை 01.19 மணி வரை.

ஏப்ரல்
இம்மாதம் அதிசாரமாக 5-ல் குரு சஞ்சரிப்பதாலும், 10-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதாலும் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் சற்று கவனமுடனிருப்பது நல்லது. அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பு அமையும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்து வந்த போட்டி பொறாமைகள் விலகும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். முருக வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 03-04-2019 இரவு 08.48 மணி முதல் 06-04-2019 காலை 07.23 மணி வரை.

மே
இம்மாதம் 10, 11-ல் செவ்வாய், 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். சிலருக்கு வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது சிறப்பு. பெண்கள் சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் குறையும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வெளியூர் பயணங்களாலும் அனுகூலமானப் பலனைப் பெற முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் விடாமுயற்சியுடன் செயல்பட்டால் நினைத்ததை சாதிக்க முடியும். அம்மன் வழிபாடு செய்வது சிறப்பு.
சந்திராஷ்டமம் – 01-05-2019 அதிகாலை 04.15 மணி முதல் 03-05-2019 பகல் 02.39 மணி வரை மற்றும் 28-05-2019 பகல் 12.18 மணி முதல் 30-05-2019 இரவு 11.04 மணி வரை.

ஜுன்
ராசியாதிபதி சூரியன் 10, 11-ல் சாதகமாக சஞ்சரிப்பதும், 11-ல் செவ்வாய், ராகு சஞ்சாரம் செய்வதும் பல்வேறு வகையில் நற்பலன்களை ஏற்படுத்தும் அமைப்பாகும். பண வரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று நிவர்த்தியாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். தொழில்- வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளை பெற முடியும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கும். விநாயகர் வழிபாடு உத்தமம்.
சந்திராஷ்டமம் – 24-06-2019 இரவு 08.20 மணி முதல் 27-06-2019 காலை 07.44 மணி வரை.

ஜுலை
ராசிக்கு 11-ல் சூரியன், சுக்கிரன், ராகு சஞ்சாரம் செய்வதால் பண வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். வெளியூர் பயணங்களால் வாழ்க்கை தரம் உயர்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகி லாபம் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 22-07-2019 அதிகாலை 03.40 மணி முதல் 24-07-2019 மாலை 03.40 மணி வரை.

ஆகஸ்ட்
ராசிக்கு 11-ல் ராகு சஞ்சாரம் செய்வது சாதகமான அமைப்பு என்றாலும், 12-ல் செவ்வாய், சூரியன், சஞ்சரிப்பதால் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே அனுகூலப்பலனைப் பெற முடியும். பண வரவுகள் சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படாது. புதிய முயற்சிகளை தள்ளி வைப்பது தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகலாம். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. தொழில் வியாபாரத்திலும் கடுமையான நெருக்கடி ஏற்படும். உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மனதிற்கு நிம்மதியை தரும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினால் எதிர்பார்த்த மதிப்பெண்ணை பெறலாம். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 18-08-2019 காலை 10.10 மணி முதல் 20-08-2019 இரவு 10.30 மணி வரை.

செப்டம்பர்
ஜென்ம ராசியில் செவ்வாய், சூரியன் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பு என்றாலும் 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். முன்கோபத்தை குறைப்பது பெரியவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொன், பொருள் போன்றவற்றை வாங்க முடியும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். தொழில், வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் குறையும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வந்து சேரும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு சுபிட்சத்தை உண்டாக்கும்.
சந்திராஷ்டமம் – 14-09-2019 மாலை 04.10 மணி முதல் 17-09-2019 அதிகாலை 04.20 மணி வரை.

அக்டோபர்
ஜென்ம ராசிக்கு 11-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத பிற்பாதியில் 3-ல் சூரியன் சஞ்சாரம் செய்ய இருப்பதும் ஓரளவுக்கு நற்பலனை ஏற்படுத்தும் அமைப்பு என்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. கணவன்- மனைவி சற்று அனுசரித்து நடப்பது நற்பலனைத் தரும். திருமண சுப காரியங்கள் கைகூடும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்ணைப் பெற முடியும். முருக வழிபாடு செய்வது நல்லது.
சந்திராஷ்டமம் – 11-10-2019 இரவு 10.25 மணி முதல் 14-10-2019 காலை 10.20 மணி வரை.

நவம்பர்
ஜென்ம ராசிக்கு 11-ல் ராகு சஞ்சரிப்பதும், மாத முற்பாதியில் 3-ல் சூரியன், 5-ஆம் தேதி முதல் குரு 5-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணவரவுகள் தாராளமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்கள் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபத்தையும் பெற முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று கடன் சுமைகள் சற்ற குறையும். உத்தியோகஸ்தர்கள் எதிர் பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டு போட்டிகளிலும் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களை தட்டி செல்வார்கள். ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 08-11-2019 அதிகாலை 05.30 மணி முதல் 10-11-2019 மாலை 05.20 மணி வரை.

டிசம்பர்
ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 5-ல் குரு, 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத திடீர் தனவரவுகள் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்றார் உறவினர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த தடையும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த வாய்ப்புகளும் கிட்டும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிட்டும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். விநாயகரை வழிபாடு செய்வது உத்தமம்.
சந்திராஷ்டமம் – 05-12-2019 பகல் 01.20 மணி முதல் 08-12-2019 அதிகாலை 01.30 மணி வரை.

அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 1,2,3,9
நிறம் – வெள்ளை, சிவப்பு
கிழமை – ஞாயிறு, திங்கள்
கல் – மாணிக்கம்
திசை- கிழக்கு
தெய்வம் – சிவன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇனிப்புக்களின் மீது ஒருவருக்கு ஆவல் அதிகரித்தால் உடலில் என்ன சத்து குறைபாடு தெரியுமா? இந்த இயற்கை பானத்தை தயாரித்து குடித்து பாருங்கள் ! உடல் எடையும் குறையும்!
Next articleபுத்தாண்டு பலன் – 2019 கன்னி!